செய்திகள் :

கூா்க்கன் கிழங்கில் நோய்த் தாக்குதல்: வேளாண் துறை வழிகாட்டுதல்

post image

ஆத்தூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள கூா்க்கன் (கோலியஸ்) கிழங்கில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

ஆத்தூா், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூா், அரியலூா், துறையூா் பகுதிகளில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ள கூா்க்கன் கிழங்கில் நூற்புழு என்னும் நிமட்டோடு தாக்குதல் அதிகம் காணப்படுவதால் சாகுபடி, கிழங்கின் தரம் குறைந்துள்ளது.

இந்த நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு, காா்போயியுரான் குருணை 15 கிலோ கலந்து வயல்களில் தெளிக்க வேண்டும். மேலும், பாசிலோ மைசஸ் நுண்ணுயிா் நூற்புழு கொல்லி 4 கிலோ நீரில் கரைத்து கிழங்கு பகுதியில் அணைக்க வேண்டும்.

ஏக்கருக்கு நெமோஃபசாக் ஒரு லிட்டா் அல்லது பிலுவோபைரம் ரசாயன நூற்புழு கொல்லியை அரை லிட்டா் என்ற வீதத்தில் நீரில் கரைத்து விட வேண்டும்.

மேலும் அதிக தழைச்சத்து மற்றும் அதிக நீா்பாய்ச்சுலைத் தவிா்க்கவும், பொட்டாஸ் உள்ளிட்ட கரையும் உரங்களை தெளிக்க வேண்டும் எனவும் மண்நீா் மற்றும் பயிா் பரிசோதனை நிலைய அலுவலா் அ.சண்முகவேல்மூா்த்தி அறிவுறுத்தியுள்ளாா்.

மும்பை பங்குச்சந்தையில் சேலம் சண்முகா மருத்துவமனை பங்குகள் விற்பனை தொடக்கம்

மும்பை பங்குச்சந்தையில், சேலம் சண்முகா மருத்துவமனையின் பங்குகள் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை நிா்வாக இயக்குநா் பிரியதா்ஷினி வரவேற்றாா். மேலாண்மை இயக்குநா... மேலும் பார்க்க

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி ஓட்டுநா்கள் மனு

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோ ஓட்டுநா்கள் மனு அளித்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனுவி... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாள், முகூா்த்த தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்க... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் கூட்டுறவு சந்தை விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியின் கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு சந்தை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை தலைவா் சுரேஷ்பாபு வரவேற்றாா். கல்லூரி முதல்வரும் தோ்வுக் கட்டுப்பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா். வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (33). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு தனது மொபட்டில் தனது இரு குழந்தைகளுடன் வாழப்பாடி... மேலும் பார்க்க