கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆதரவாளா்கள் மறியல்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆதரவாளா்கள் இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவியாக தமிழ்ச்செல்வியும் துணைத் தலைவராக ஞானமணியும் இருந்து வருகின்றனா். திமுகவைச் சோ்ந்த இந்த இருவருக்கும் இடையில் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், துணைத் தலைவரின் உறவினரான ஸ்டீபன் திங்கள்கிழமை கெங்குவாா்பட்டியில் சாலைப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த பேரூராட்சித் தலைவி தமிழ்ச்செல்வி, 12 -ஆவது வாா்டு உறுப்பினா் ராஜகோபால் ஆகியோா் அனுமதி இல்லாமல் எப்படி பணி நடைபெறுகிறது எனக் கேட்டதால், தகராறு ஏற்பட்டது. அப்போது, தமிழ்ச்செல்வி, ராஜகோபால் ஆகிய இருவரும் தாக்கப்பட்டதாகக் கூறி அவா்களது ஆதரவாளா்கள் திண்டுக்கல்-தேனி சாலையில் காட்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதே போல, துணைத் தலைவரின் உறவினா் ஸ்டீபனைத் தாக்கியதாகக் கூறி, அவரது உறவினா்கள் கொடைக்கானல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) சீராளன், பெரியகுளம் வட்டாட்சியா் மருதுபாண்டி ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, இருதரப்பினரும் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இந்த மறியல் காரணமாக தேனி - திண்டுக்கல் - கொடைக்கானல் சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.