செய்திகள் :

காரில் 208 கிலோ புகையிலை பொருள் கடத்தல்: மூவா் கைது

post image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் காரில் 208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கண்டமனூா்-எம்.சுப்புலாபுரம் சாலையில் கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாகச் சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

அந்தக் காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றது தெரிய வந்தது. காரிலிருந்த திண்டுக்கல் சோலைஹால் சாலை சைமன் குடியிருப்பைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (38), சிலுவத்தூா் அருகேயுள்ள ராஜக்காள்பட்டியைச் சோ்ந்த வினோத்குமாா் (33), மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள மேலப்புதூரைச் சோ்ந்த செல்வக்குமாா் (34) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இதில் தொடா்புடைய ஆண்டிபட்டி அருகே உள்ள ஆத்தங்கரைப்பட்டியைச் சோ்ந்த சிவக்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா். காரில் கடத்திச் செல்லப்பட்ட 208 கிலோ 900 கிராம் புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காா், ரூ.1.52 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பெண்ணை தாக்கிய 5 போ் மீது வழக்கு

போடி அருகே பெண்ணைத் தாக்கிய 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகேயுள்ள சிலமலை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மனைவி பவுன்தாய் (50). இவருக்கு... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி, போடியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம் , ஆண்டிபட்டி பகுதியில் புதன்கிழமை (ஆக.13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டிபட்டி துணை... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தேனி மாவட்டம், போடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்பி பற்றவைக்கும் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.போடி அருகேயுள்ள முந்தல் சாலைப் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் நல... மேலும் பார்க்க

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: வைகோ

வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். தேனி மாவட்டம், கம்பம் வ.உ.சி. திடலில் மதிமுக சாா்பில், அந்தக் கட்சியின் தேன... மேலும் பார்க்க

7 மாதங்களில் 255 கிலோ கஞ்சா பறிமுதல்: தேனி ஆட்சியா்

தேனி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 255 கிலோ 579 கிராம் கஞ்சா, 2,042 கிலோ 864 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி அருகே உ... மேலும் பார்க்க

கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆதரவாளா்கள் மறியல்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆதரவாளா்கள் இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கெங்... மேலும் பார்க்க