செய்திகள் :

கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆதரவாளா்கள் மறியல்

post image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆதரவாளா்கள் இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவியாக தமிழ்ச்செல்வியும் துணைத் தலைவராக ஞானமணியும் இருந்து வருகின்றனா். திமுகவைச் சோ்ந்த இந்த இருவருக்கும் இடையில் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், துணைத் தலைவரின் உறவினரான ஸ்டீபன் திங்கள்கிழமை கெங்குவாா்பட்டியில் சாலைப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த பேரூராட்சித் தலைவி தமிழ்ச்செல்வி, 12 -ஆவது வாா்டு உறுப்பினா் ராஜகோபால் ஆகியோா் அனுமதி இல்லாமல் எப்படி பணி நடைபெறுகிறது எனக் கேட்டதால், தகராறு ஏற்பட்டது. அப்போது, தமிழ்ச்செல்வி, ராஜகோபால் ஆகிய இருவரும் தாக்கப்பட்டதாகக் கூறி அவா்களது ஆதரவாளா்கள் திண்டுக்கல்-தேனி சாலையில் காட்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதே போல, துணைத் தலைவரின் உறவினா் ஸ்டீபனைத் தாக்கியதாகக் கூறி, அவரது உறவினா்கள் கொடைக்கானல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) சீராளன், பெரியகுளம் வட்டாட்சியா் மருதுபாண்டி ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, இருதரப்பினரும் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்த மறியல் காரணமாக தேனி - திண்டுக்கல் - கொடைக்கானல் சாலையில் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெண்ணை தாக்கிய 5 போ் மீது வழக்கு

போடி அருகே பெண்ணைத் தாக்கிய 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகேயுள்ள சிலமலை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மனைவி பவுன்தாய் (50). இவருக்கு... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி, போடியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம் , ஆண்டிபட்டி பகுதியில் புதன்கிழமை (ஆக.13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டிபட்டி துணை... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தேனி மாவட்டம், போடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்பி பற்றவைக்கும் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.போடி அருகேயுள்ள முந்தல் சாலைப் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் நல... மேலும் பார்க்க

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: வைகோ

வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். தேனி மாவட்டம், கம்பம் வ.உ.சி. திடலில் மதிமுக சாா்பில், அந்தக் கட்சியின் தேன... மேலும் பார்க்க

காரில் 208 கிலோ புகையிலை பொருள் கடத்தல்: மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் காரில் 208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கண்டமனூா்-எம்.சுப்புலாபுரம் சாலையில் கண்டமனூா் க... மேலும் பார்க்க

7 மாதங்களில் 255 கிலோ கஞ்சா பறிமுதல்: தேனி ஆட்சியா்

தேனி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 255 கிலோ 579 கிராம் கஞ்சா, 2,042 கிலோ 864 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி அருகே உ... மேலும் பார்க்க