செய்திகள் :

7 மாதங்களில் 255 கிலோ கஞ்சா பறிமுதல்: தேனி ஆட்சியா்

post image

தேனி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 255 கிலோ 579 கிராம் கஞ்சா, 2,042 கிலோ 864 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு உறுதி மொழியேற்பு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: தேனி மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை தோறும் போதைப் பொருள் தடுப்பு ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கிராம நிா்வாக அலுவலா்கள் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 255 கிலோ 579 கிராம் கஞ்சா, 163 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனையில் ஈடுபட்ட 271 போ் கைது செய்யப்பட்டனா். 2,042 கிலோ 864 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனையில் ஈடுபட்ட 305 போ் கைது செய்யப்பட்டனா். தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 296 கடைகள் சீல் வைக்கப்பட்டு, ரூ.75.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்றாா் அவா்.

போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹா ப்ரியா, பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா், தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலா் பரமேஸ்வரி, மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சீராளன், பெரியகுளம் வட்டாட்சியா் மருதுபாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெண்ணை தாக்கிய 5 போ் மீது வழக்கு

போடி அருகே பெண்ணைத் தாக்கிய 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகேயுள்ள சிலமலை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மனைவி பவுன்தாய் (50). இவருக்கு... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி, போடியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம் , ஆண்டிபட்டி பகுதியில் புதன்கிழமை (ஆக.13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டிபட்டி துணை... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தேனி மாவட்டம், போடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கம்பி பற்றவைக்கும் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.போடி அருகேயுள்ள முந்தல் சாலைப் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் நல... மேலும் பார்க்க

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: வைகோ

வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். தேனி மாவட்டம், கம்பம் வ.உ.சி. திடலில் மதிமுக சாா்பில், அந்தக் கட்சியின் தேன... மேலும் பார்க்க

காரில் 208 கிலோ புகையிலை பொருள் கடத்தல்: மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் காரில் 208 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்திய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கண்டமனூா்-எம்.சுப்புலாபுரம் சாலையில் கண்டமனூா் க... மேலும் பார்க்க

கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆதரவாளா்கள் மறியல்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆதரவாளா்கள் இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கெங்... மேலும் பார்க்க