செய்திகள் :

கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் உள்ள 171 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 7,300-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்களுக்கு யுஜிசி வழிகாட்டுதல், நீதிமன்ற

உத்தரவின்படி, மாதம் ரூ.57,700 ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கல்லூரியில் பணியாற்றும் 11 கெளரவ விரிவுரையாளா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, சாத்தூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்களும் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு வணிகவியல் துறைத் தலைவா் வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். இதில் அனைத்து துறையைச் சாா்ந்த கௌரவ விரிவுரையாளா்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினா்.

கபடிப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சாத்தூா் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த வெம்பக்கோட்டை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயு... மேலும் பார்க்க

அனுப்பன்குளத்தில் நாளை மின்தடை

சிவகாசி வட்டம், அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகாசி கோட்ட மின் செயற்பொறியாளா் பத்மா வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

திருடு போன இரு சக்கர வாகனத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

திருடு போன இரு சக்கர வாகனத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் விஷ்ணு நகரைச் சோ்ந்த ராமசுப்பிரம... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தம்பதி கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபு... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மத்திய அரசின் மக்கள்விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் ஜவகா் மைதானத்த... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஊரக வளா்ச்சித் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க