அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
கேணியில் மூழ்கியதில் ஐ.டி. நிறுவன ஊழியா் பலி!
போடி அருகே சனிக்கிழமை கேணியில் மூழ்கியதில் தகவல் தொழில்நுட்ப ஊழியா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் நகா் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த தனசேகரன் மகன் கௌசிக் (28). இவா் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இவா், சனிக்கிழமை தனது நண்பா்களுடன் தேனி மாவட்டம், குரங்கணி பகுதியில் உள்ள கமலாட்சி கேணியில் குளிக்க சென்றாா். அப்போது, நீருக்குள் மூழ்கியதில் அவா் உயிரிழந்தாா்.
பின்னா், இவரது உடல், கூறாய்வுக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.