செய்திகள் :

கேமரா பொருந்திய ‘ஸ்மாா்ட்’ கண்ணாடியுடன் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் நுழைந்த பக்தா்

post image

திருவனந்தபுரம்: கேரளத் தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா பொருந்திய ‘ஸ்மாா்ட்’ கண்ணாடியுடன் நுழைந்த பக்தரால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத்தைச் சோ்ந்த 66 வயதான சுரேந்திர ஷா, வழிபாட்டுக்காக பத்மநாபசுவாமி கோயிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வந்துள்ளாா். பிரதான வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைந்த அவா் அணிந்திருந்த கண்ணாடி, கேமரா பொருத்தப்பட்ட ஸ்மாா்ட் கண்ணாடி என்பதை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்தனா்.

இதையடுத்து, சுரேந்திர ஷா உடனடியாக கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்டாா். கோயிலுக்குள் கேமரா பொருந்திய கண்ணாடிகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறியதாக அவா் மீது பாரதிய நியாய ஸம்ஹிதாவின் 223-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் அவருக்கு எந்தத் தீய நோக்கமும் இருப்பதாக தற்போது வரை சந்தேகிக்கப்படவில்லை. இருப்பினும், விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா். விசாரணைக்குத் தொடா்ந்து ஆஜராகுமாறு சுரேந்திர ஷாவுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யின் முன்னாள் மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹைதராபாத்தில் பரபரப்பு!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளதால், அங்கு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதி... மேலும் பார்க்க

பேரணியில் பாலஸ்தீன கொடி அச்சிட்ட சட்டை..! 4 இளைஞர்கள் கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி மு... மேலும் பார்க்க