செய்திகள் :

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

post image

கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருவதால், 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பருவமழை தொடங்கியுள்ளதாலும், கர்நாடக கடல்பகுதியில் நிலவும் சுழற்சியினாலும் கேரளத்தின் பல்வேறு இடங்களில் பரவலாகக் கனமழை பெய்து வருகின்றது.

பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது, வீடுகள் அடித்துச்செல்லப்பட்டது. வீட்டின் கூரை சேதமடைந்தது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களான காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பாலக்காடு, எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது: பினராயி விஜயன்

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன், ஈரான் மீதான இஸ்ரே... மேலும் பார்க்க

அமைதியாக இருப்பதே புத்திசாலித்தனம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சர்கள் அறிவுரை!

சில சமயங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுரை வழங்கினார்.விஜய் ஷாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், கட்சியினர் பேசும்போது கவனமுடன் பேச வேண்டும் என்று மத்தி... மேலும் பார்க்க

உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்வர்ஷா ஹல்லபோர் கிராமத்தில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் குறைவாக இருந்ததால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் எப்-35 போர் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! 12 பேரின் உடல்கள் ஒப்படைப்பு! மருத்துவப் பணியில் 600 பேர்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படுகிறது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரி... மேலும் பார்க்க

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு தில்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகா... மேலும் பார்க்க