செய்திகள் :

கேரளம்: நிபா வைரஸ் அபாயத்தில் 499 பேர்! பட்டியல் வெளியீடு!

post image

கேரளத்தில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்தோர் பட்டியலில் 499 பேர் இடம்பெற்றுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரளத்தின், மலப்புறம் மாவட்டத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 18 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் தற்போது அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் வந்தோரை அடையாளம் கண்டு பட்டியல் ஒன்றை கேரள சுகாதாரத் துறை தயாரித்துள்ளது.

அதில், 499 பேர் இடம்பெற்றுள்ள நிலையில், மலப்புறத்தில் 203 பேரும், கோழிக்கோடில் 178 பேர், பாலக்காடு மற்றும் எர்ணாக்குளம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மலப்புறத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் உள்பட 11 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், பாலக்காடு மாவட்டத்தில் 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இத்துடன், மாநிலத்தில் 29 பேர் அதிக ஆபத்து பட்டியலிலும், 117 ஆபத்து பட்டியலிலும் இருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், மலப்பறத்தில் புதிய தொற்று பாதிப்பும் உறுதி செய்யப்படாததால், மாவட்ட நிர்வாகம் அங்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை விலக்கியுள்ளது.

முன்னதாக, கேரளத்தில் நிபா பாதிப்புகள் கண்டறியப்பட்ட 2 வட மாவட்டங்களிலும், ஆய்வு மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறையின் தேசிய குழுவொன்று, ஜூன் 9 ஆம் தேதி அங்கு வருகைத் தந்தது குறிப்பிடத்தக்கது.

Kerala Health Minister Veena George has said that 499 people have been in contact with two people infected with the Nipah virus in Kerala.

இதையும் படிக்க: நடிகர் கபில் சர்மாவின் புதிய ஹோட்டலில் காலிஸ்தான் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு!

ஹிமாசல் பருவமழைக்கு இதுவரை 92 பேர் பலி: ரூ.751.78 கோடி இழப்பு!

ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதும் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ... மேலும் பார்க்க

மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் பற்றி பலரும் தவறாகப் பேசியதால் மனம் வேதனையடைந்து அவமானத்தால், மகளை சுட்டுக் கொன்றதாக, கைது செய்யப்பட்ட தந்தை தீபக் யாதவ் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹர... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க