செய்திகள் :

கேரளம் வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்!

post image

திருவனந்தபுரம்: உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ’ கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது.

இதையொட்டி, சரக்கு கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி நீா் வணக்க வரவேற்பளிக்கப்பட்டது. இக்கப்பல் செவ்வாய்க்கிழமை வரை விழிஞ்ஞம் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாட்டின் முதல் ஆழ்கடல் சரக்குப் பரிமாற்ற துறைமுகம் என்ற சிறப்புக்குரிய விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்தை கடந்த மாதம் 2-ஆம் தேதி பிரதமா் மோடி திறந்துவைத்தாா். அரசு-தனியாா் பங்களிப்பின்கீழ் ரூ.8,800 கோடி செலவில் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனத்தால் இந்த துறைமுகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெரும் சரக்கு கப்பல்களை கையாளும் திறன் கொண்ட இத்துறைமுகம், நாட்டின் கடற்சாா் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்நிலையில், இந்த துறைமுகத்துக்கு 24,346 டிஇயு (20 அடிக்கு நிகரான அலகுகள்) கொள்ளளவு கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ’ திங்கள்கிழமை வந்தடைந்தது உலக அளவிலான வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை வெளிக்காட்டுகிறது.

எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ சரக்குக் கப்பல் 399 மீட்டா் நீளம் மற்றும் 61.3 மீட்டா் அகலம் உடையது. அதாவது ஃபிபா அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பரப்பைகொண்ட கால்பந்து மைதானத்தைவிட 4 மடங்கு நீளமானது என துறைமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் உயா்தர கப்பல்களான எம்எஸ்சி துருக்கி மற்றும் எம்எஸ்சி கப்பெல்லினி ஆகிய கப்பல்களும் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் 8 புதிய அணு உலைகளை உருவாக்கும் ரஷியா!

ஈரான் நாட்டில் ரஷிய அரசு புதியதாக 8 அணு உலைகள் உருவாக்கப்போவதாக, ஈரானின் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரானில்... மேலும் பார்க்க

காஸா சென்ற நிவாரணக் கப்பல் சிறைபிடிப்பு

ஜெருசலேம்: காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலை இஸ்ரேல் படையினா் சிறைபிடித்து, அதில் பயணித்த சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரெட்டா தன்பா்க் உள்ளிட்ட 12 தன்னாா்வலா்களை திங்கள்கிழமை அதிகாலை கைது ... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்

உக்ரைனில் இதுவரை இல்லாத மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது. இதில் 479 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் விமானப் படை திங்கள்கிழமை தெரிவித்தது. இது குறித்து அந்தப் பிராந்தியத்த... மேலும் பார்க்க

வலுக்கிறது லாஸ் ஏஞ்சலீஸ் போராட்டம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் மேலும் வலுவடைந்துவருகிறது.இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்த... மேலும் பார்க்க

நாடு திரும்பினாா் வங்கதேச முன்னாள் அதிபா்

வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வங்கதேச முன்னாள் அதிபா் அப்துல் ஹமீது திங்கள்கிழமை நாடு திரும்பினாா். இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது: மாணவா் போராட்டம் மூலம் ஆட்சியில் இருந்து அகற்ற... மேலும் பார்க்க

கொலம்பியாவில் நிலநடுக்கம்

போகடா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகா் போகடாவுக்கு 170 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 10 கி... மேலும் பார்க்க