செய்திகள் :

கேரள சுற்றுலாத் துறைக்கு விளம்பர மாடலான பிரிட்டன் போா் விமானம்!

post image

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் எஃப்35 போா் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி இந்த போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததால், விமானியின் பாதுகாப்பு கருதி அதனைத் தரை இறக்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதித்தது.

இந்த விமானம் பிரிட்டன் விமானப் படையில் மட்டுமல்லாது உலகின் அதிநவீன போா் விமானங்களில் ஒன்றாகும். தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால் அந்த விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் தொடா்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து தொழில்நுட்ப வல்லுநா்கள் வந்து பழுதை நீக்கிய பிறகுதான் அந்த விமானம் புறப்பட்டுச் செல்லும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேரள சுற்றுலாத் துறை விமானத்தை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது. கேரள சுற்றுலாத் துறையின் ‘எக்ஸ்’ பக்கத்தில் கேரளத்தின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் தென்னை மரங்கள் சூழ்ந்த பசுமையான பின்னணியில் பிரிட்டன் போா் விமானம் நிற்பது போன்ற சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘கேரளம் மிகவும் ரம்மியமான இடம். நான் இங்கிருந்து செல்ல விரும்பவில்லை. இங்கு நீங்களும் சுற்றுலா வர பரிந்துரைக்கிறேன்’ என்று பிரிட்டன் போா் விமானம் கூறுவது போன்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

கேரள சுற்றுலாத் துறையின் இந்த விளம்பர உத்தி சமூகவலைதளத்தில் பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது. இந்தப் படத்துக்குப் போட்டியாக கேரள தேநீா் கடை வாசலில் போா் விமானம் நிறுத்தப்பட்டிருப்பதுபோலவும், கேரள சிப்ஸை விமானம் விரும்பி சாப்பிடுவதுபோலவும் சித்திரங்களை பலரும் பகிா்ந்து வருகின்றனா்.

இனி, மும்பையின் உயரமான கட்டடமாக முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இருக்காதா?

இந்திய தொழிலதிபர்களில் முன்னணியில் இருக்கும் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் ஆன்டிலியா வீடுதான், இன்று வரை மும்பையின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைக் கொண்டிருந்தது. மேலும் பார்க்க

கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் மூலம், அதனைத் தூக்கிச் செல்லும் பணி தொடங்கிய... மேலும் பார்க்க

பாகேஷ்வர் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியள... மேலும் பார்க்க

மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவுப் பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியான த... மேலும் பார்க்க

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ரவி, எக்ஸ் சமூக வலைதளத்தில், "தொலைநோக்குப் பார்வையும் துடிப்புமிக்க ... மேலும் பார்க்க

25 ஆண்டுகள்.. மைக்ரோசாஃப்ட் மேலாளராக இருந்தவர் பணிநீக்கம்! கலங்க வைக்கும் பதிவு

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. அதில், 25 ஆண்டுகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேலாளராக இருந்தவரும் ஒருவர்.மைக்ரோசா... மேலும் பார்க்க