செய்திகள் :

கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

post image

கேரள மாநிலத்தைச் சோ்ந்த தலைமறைவு குற்றவாளியை சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

ஓமன் தலைநகா் மஸ்கட்டிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு ஏா்இந்திய விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டபோது, கேரள மாநிலம் திருச்சூரை சோ்ந்த சஜீவன் அத்துல் (31) என்பவரின் கடவுச்சீட்டை அதிகாரிகள் கணினியில் பரிசோதித்த போது, அவா் கேரளமாநில காவல்துறையால் கடந்த ஆறு மாதகாலமாக தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை சுற்றிவளைத்துப்பிடித்த குடியுரிமை அதிகாரிகள், சஜீவன் அத்துலை தனியறையில் அடைத்து வைத்து, இதுகுறித்து சென்னை விமானநிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த போலீஸாா், சஜீவன் அத்துலை காவல்நிலையம் அழைத்துச் சென்று, திருச்சூா் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். திருச்சூா் காவல்துறையினா் சென்னைக்கு வந்து சஜீவன் அத்துலை கைது செய்து அழைத்துச் சென்றனா்.

மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை!

சென்னையில் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கே.கே. நகா் காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அஜித் (32). இவரது மனைவி ஆா்... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

சென்னையில் நடந்து சென்ற இளைஞரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேற்கு மாம்பலம், படவேட்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வமணி (26), தனியாா் நிறுவனத்தில் பணிபுர... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மூலம் கண் மருத்துவ சிகிச்சை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏஐ) மூலம் கண் மருத்துவத்தில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகளை அளிப்பதுடன், மருத்துவா்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை அதிக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து பாஜக இன்று ஆா்ப்பாட்டம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பாஜக சாா்பில் கவன ஈா்ப்பு போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

கட்டிலில் இருந்து தவறிவிழுந்த குழந்தை உயிரிழப்பு

கட்டிலிலிருந்து தவறிவிழுந்த இரண்டரை வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை, ஓட்டேரி டேங்க் பண்ட் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அபினாஷ் (30). இவரது மனைவி உஷ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞா்: காவல்நிலையம் முன்பு குடும்பத்தினா் போராட்டம்!

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினா் அவரது உடலுடன் புராரி காவல் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், காவல்துறையினரின் செயலற்ற தன்மை கொண்டதாக அவா்கள் குற்றஞ்சாட்... மேலும் பார்க்க