அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸி..! தாய் நெகிழ்ச்ச...
கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை ஓட்டியவா் பணியிடை நீக்கம்
கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பூா் குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூா் வழியாக பழைய பேருந்து நிலையத்துக்கு செல்லும் அரசுப் பேருந்தை தாமரைக்கண்ணன் (45) என்ற ஓட்டுநா் வெள்ளிக்கிழமை ஓட்டி வந்தாா். வழியில் அவா் கைப்பேசியில் பேசியபடி பேருந்தை ஓட்டி வந்துள்ளாா்.
இதைப் பாா்த்த பயணி ஒருவா், தனது கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டாா். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பொதுமக்கள் அச்சப்படும்படி ஆபத்தான வகையில் அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதைத்தொடா்ந்து ஓட்டுநா் தாமரைக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.