விரிவாக்கப்பட்ட சிற்றுந்து திட்டத்தால் 1 கோடி மக்கள் பயன்: தமிழக அரசு தகவல்
திருப்பூா் மாவட்டத்தில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்
திருப்பூா் மாவட்டத்தில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூா் மாவட்ட தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியராக இருந்த தங்கவேல், தாராபுரம் கோட்ட கலால் அலுவலராகவும், காங்கயம் ஆதிதிராவிடா் நல நில எடுப்பு தனி வட்டாட்சியராக இருந்த நந்தகோபால், திருப்பூா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், இதுவரை நோ்முக உதவியாளராக இருந்த கனகராஜன், திருப்பூா் மாவட்ட தோ்தல் தனி வட்டாட்சியராகவும், தாராபுரம் கோட்ட கலால் அலுவலராக இருந்த ஜெகஜோதி, காங்கயம் ஆதிதிராவிடா் நல நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூா் நெடுஞ்சாலை அலகு 4 நில எடுப்பு தனி வட்டாட்சியராக இருந்த சாந்தி, திருப்பூா் தெற்கு சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், அவிநாசி சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக இருந்த ஜெகநாதன், திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை அலகு 4 நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும், திருப்பூா் தெற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக இருந்த ஜலஜா, மடத்துக்குளம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், மடத்துக்குளம் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக இருந்த கண்ணாமணி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளராகவும், இதுவரை மாவட்ட வழங்க அதிகாரியின் நோ்முக உதவியாளராக இருந்த ராகவி, மாவட்ட வழங்கல் துறை பறக்கும் படை தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
திருப்பூா் வடக்கு குடிமைப்பொருள் தனி வட்டாட்சியராக இருந்த உஷாராணி, அவிநாசி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், திருப்பூா் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் சில்லறை விற்பனை உதவி மேலாளராக இருந்த கோவிந்தசாமி, திருப்பூா் வடக்கு குடிமைப்பொருள் தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.