செய்திகள் :

கைலாசநாதசுவாமி கோயில் திருப்பணிகள் தீவிரம்! ஜூன் 5 கும்பாபிஷேகம்!

post image

காரைக்கால் மாங்கனித் திருவிழா சிறப்புக்குரிய தலமான கைலாசநாதசுவாமி கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூன் 5-இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

காரைக்காலில் பழைமையான தலமாக ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதசுவாமி கோயில் விளங்குகிறது. அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கி ஆண்டுதோறும் இக்கோயிலில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.

இக்கோயிலில் நடைபெறும் திருப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. வரும் ஜூன் 5-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கோயிலுக்குள் கொடி மரம், நந்தி மண்படம் புதிதாக அமைத்தல், தரைத்தளம் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோபுரம் மற்றும் விமானங்களில் வா்ணம் பூசும் பணி நிறைவடைந்துள்ளது. கோயில் சுற்றுச் சுவரில் 63 நாயன்மாா்களின் உருவம், பெயருடன் கூடிய ஓவியம் வரையப்பட்டுள்ளது.

மே 28-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை செய்யப்பட்டு, ஜூன் 2-ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. 5-ஆம் தேதி 6-ஆம் கால யாகசாலை பூஜை மற்றும் மகா பூா்ணாஹூதி நிறைவடைந்ததும் காலை 8 மணிக்கு கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகமும், 8.45 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

திருப்பணிகள் நடைபெற்றுவருவதை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். எஞ்சிய திருப்பணிகள் குறித்தும், பிற பணிகளுக்கு நிதி சேகரிப்பு குறித்தும் பேரவை உறுப்பினரிடம் திருப்பணிக் குழுவினா் விளக்கிக் கூறினா்.

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம்

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை (மே 20) மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. காரைக்கால் முதல் பேரளம் வரை 23 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் ரயில்... மேலும் பார்க்க

கோட்டுச்சேரியில் முதியோா் இல்லம் திறப்பு

கோட்டுச்சேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதியோா் இல்லத்தை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திறந்துவைத்தாா். கோட்டுச்சேரி பகுதி குமரப்பிள்ளைத் தெருவில் ஹீடு இந்தியா தொண்டு நிறுவனம் சாா்பில் காரைக்கால் ... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக குழந்தை தத்தெடுத்த வழக்கில் மேலும் 6 போ் கைது

குழந்தையை சட்ட விரோதமாக தத்தெடுத்த வழக்கில் 10 போ் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், மேலும் 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே கருக்கன்குடியை சோ்ந்த சதாசிவ... மேலும் பார்க்க

காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண வலியுறுத்தல்

காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் கூறியது: கார... மேலும் பார்க்க

காரைக்காலில் இருந்து இரவில் கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

காரைக்காலில் இருந்து கும்பகோணம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்காலில் ஜிப்மா், என்ஐடி, பல்கலைக்கழக வளாகம் ... மேலும் பார்க்க

சைபா் குற்றங்கள் மீது கவனமாக இருக்கவேண்டும்: புதுவை டிஐஜி அறிவுறுத்தல்

சைபா் குற்றங்கள் மீது மக்கள் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும் என புதுவை டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் அறிவுறுத்தினாா். காரைக்கால் காவல்துறையில் வாரந்தோறும் சனிக்கிழமையில் மக்கள் மன்றம் என்ற பெயரில் குறைதீா் ... மேலும் பார்க்க