செய்திகள் :

IPL Playoffs : 'ஒரே ஒரு இடம்; மோதிக்கொள்ளும் மும்பை, டெல்லி' - ப்ளே ஆப்ஸூக்கு செல்லப்போவது யார்?

post image

'ஒரே நாளில் ப்ளே ஆப்ஸில் 3 அணிகள்!'

நடப்பு ஐ.பி.எல் சீசனில் ப்ளே ஆப்ஸூக்கு எந்தெந்த அணிகள் செல்லும் என்கிற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. நேற்று ஒரே நாளில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப் என மூன்று அணிகள் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்றிருக்கின்றன.

IPL 2025 Playoffs
IPL 2025 Playoffs

ப்ளே ஆப்ஸில் இன்னும் ஒரே ஒரு இடம் மட்டுமே மிச்சருமிருக்கிறது. மும்பை, டெல்லி, லக்னோ என மூன்று அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக டெல்லிக்கும் மும்பைக்கும் இடையேதான் கடுமையான போட்டியே நிலவுகிறது.

மும்பை அணி 12 போட்டிகளில் ஆடி 14 புள்ளிகளில் இருக்கிறது. டெல்லி அணி 12 போட்டிகளில் ஆடி 13 புள்ளிகளில் இருக்கிறது. லக்னோ அணி 11 போட்டிகளில் ஆடி 10 புள்ளிகளில் இருக்கிறது.

Lucknow Super Giants
Lucknow Super Giants

'லக்னோவுக்கான வாய்ப்பு!'

லக்னோ அணி ஹைதராபாத், குஜராத், பெங்களூரு ஆகிய அணிகளுக்கு எதிராக இன்னும் ஆட வேண்டும். மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும். அப்படியே வென்றாலும் 16 புள்ளிகள்தான் வரும். அதை வைத்துக் கொண்டு ப்ளே ஆப்ஸ் செல்ல வேண்டுமெனில், மும்பை, டெல்லி அணிகளின் முடிவை சார்ந்தே அது சாத்தியப்படும். லக்னோ அணி 3 போட்டிகளையும் வென்று அவர்களுக்கு சாதகமாக மற்ற போட்டிகளின் முடிவும் கிடைப்பதற்கு வாய்ப்புக் குறைவே.

ப்ளே ஆப்ஸில் எஞ்சியிருக்கும் அந்த ஒரு இடத்தைப் பிடிக்க, மும்பைக்கும் டெல்லிக்குமே அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு அவர்கள் ப்ளே ஆப்ஸூக்கு முன்பாகவே ஒரு நாக் அவுட்டில் ஆட வேண்டியிருக்கிறது. மும்பை அணிக்கு டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுடன் போட்டி இருக்கிறது.

Mumbai Indians
Mumbai Indians

டெல்லி அணிக்கும் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுடன் போட்டி இருக்கிறது. கிட்டத்தட்ட இது ஒரு ட்ரை சீரிஸ் போல நடக்கவிருக்கிறது. டெல்லியோ மும்பையோ எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளையும் வெல்லும் அணியே ப்ளே ஆப்ஸூக்குள் சௌகரியமாக செல்ல முடியும்.

Delhi Capitals
Delhi Capitals

ஒருவேளை பஞ்சாப் அணி மும்பை, டெல்லி இரண்டு அணிகளையும் தோற்கடித்தால் அப்போது லக்னோவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதற்கு லக்னோவும் எஞ்சியிருக்கும் போட்டிகள் அத்தனையையும் வெல்ல வேண்டும்.

RCB vs KKR : 'ரத்தான போட்டி; ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த கொல்கத்தா - RCB நிலை என்ன?

'விடாத மழை!'பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக ரத்தாகியிருக்கிறது. இதனால் இரு அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டி ரத்தானதால் ப்ளே ஆஃப் ரேஸில் என்னென... மேலும் பார்க்க

Neeraj Chopra: கனவாக இருந்த 90 மீ இலக்கு; இந்தியா - பாகிஸ்தான் சர்ச்சை; எப்படிச் சாதித்தார் நீரஜ்?

'நீரஜ் சோப்ரா - 90 மீ மார்க்!'நீரஜ் சோப்ரா தனது கரியரில் இதுவரை எட்டாத இலக்கை எட்டியிருக்கிறார். தோஹாவில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் 90.23 மீட்டருக்கு ஈட்டியை வீசி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். 90... மேலும் பார்க்க

``அயராத அர்ப்பணிப்பு, ஆர்வத்தின் வெளிப்பாடுதான் இது'' - சாதனைப் படைத்த நீரஜ் சோப்ரா; வாழ்த்திய மோடி

90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா புதிய சாதனையைப் படைத்து இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்திருக்கிறார்.தடகள வீரரான நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் சர்வதேச களத்தில் சிறந்து விளங்கி இந்தியாவி... மேலும் பார்க்க

Neeraj Chopra : 'பாகிஸ்தான் வீரருடன் நெருங்கிய நட்பில் இல்லை!' - நீரஜ் சோப்ரா விளக்கம்!

'நீரஜ் சோப்ரா விளக்கம்!'ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக தங்கம் மற்றும் வெள்ளி வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சார்ந்து சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்திருந்தது. நீரஜ் சோப்ரா (Neeraj Chopra)அதாவது, பெங... மேலும் பார்க்க

Mumbai Indians : 'ப்ளே ஆப்ஸூக்காக ஜானி பேர்ஸ்டோவை அழைத்து வருகிறதா மும்பை?' - லேட்டஸ்ட் அப்டேட்

இந்தியா - பாகிஸ்தான் பதற்றநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் போட்டிகள் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிகள் தள்ளிப்போய் தேதி மாறியதால் சில வெளிநாட்டு வீரர்கள் எஞ்சிய போட்டிகள... மேலும் பார்க்க