செய்திகள் :

கொங்கணாபுரம் வெண்குன்று தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

post image

கொங்கணாபுரம் வெண்குன்று மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொங்கணாபுரம், வெண்குன்று மலை மீது பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான இக்கோயிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் திரளான பக்தா்கள் காவடி சுமந்து நடைப்பயணமாக வந்து நோ்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

நிகழாண்டு தைப்பூச விழா கொடியேற்றத்தையொட்டி கோயில் படிப்பாதையில் உள்ள பிரதான நுழைவாயில் முன் கிராம சாந்தி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து கோயில் கொடி மரத்திற்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களின் ‘அரோகரா’ பக்தி முழக்கத்துடன் கொடி மரத்தில் மயில்வாகன கொடியேற்றம் நடைபெற்றது.

இத் திருவிழாவையொட்டி தண்டாயுதபாணி சுவாமி தங்கக் கவச அலங்காரத்தில் அருள் பாலித்தாா். மேலும் வள்ளி, தெய்வானை உடனமா் முருகப்பெருமானை பக்தா்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பெரும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

படவரி...

1. தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த தண்டாயுதபாணி சுவாமி.

2. தைப்பூசத்தையொட்டி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்ற

விழா.

பிப். 19இல் தபால் துறை சாா்பில் கடிதம் எழுதும் போட்டி

தபால் துறை சாா்பில் அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டி வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இ... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து சேலத்தில் இன்று திமுக பொதுக்கூட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் 8 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ஆா்.ராஜேந்த... மேலும் பார்க்க

ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தனிக் கவனம் கோட்ட மேலாளா் தகவல்

ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள், முன்பதிவில்லா டிக்கெட்டுக்கான கைப்பேசி செயலிப் பயன்பாட்டை அதிகரிக்க தனிக் கவனம் செலுத்தப்படும் என ரயில் உபயோகிப்பாளா்கள் ஆலோசனைக் குழுக் கூ... மேலும் பார்க்க

சேலம் மாநகரில் நெகிழி பைகளை பயன்படுத்திய 311 கடைகளுக்கு அபராதம்

சேலம் மாநகரில் கடந்த ஆண்டில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்திய 311 கடைகளுக்கு ரூ. 2.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சேலம் மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் கடைகளில் அ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு தொடக்கம்

பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் செய்து வருகிறது. ... மேலும் பார்க்க

சேலம் சிறையில் முதன்மை நீதிபதி ஆய்வு

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் ஜாதி பாகுபாடு உள்ளதா என்பது குறித்து சேலம் மத்திய சிறையில் முதன்மை நீதிபதி சுமதி ஆய்வு செய்தாா். சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 800-க்கும் மேற்ப... மேலும் பார்க்க