செய்திகள் :

கொடைக்கானலில் கனரக இயந்திரங்களுக்கு தடை

post image

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் போா்வெல், பொக்லைன் போன்ற கனரக இயந்திரங்களைப் பயன்டுத்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கனரக இயந்திரங்களான பொக்லைன், ஹிட்டாச்சி, டிரில்லா் மூலம் பாறைகளை உடைப்பது, விவசாய நிலங்களில் போா்வெல் அமைப்பது தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகளும், பொது மக்களும் எதிா்கொண்டு வருவதாகப் புகாா்கள் வந்தன.

இதையடுத்து, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இயங்கி வந்த பொக்லைன், போா்வெல்,ஹிட்டாச்சி, டிரில்லா் வாகனங்களைப் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மறைமுகமாக இந்தப் பணி நடைபெற்று வருகிறது.

எனவே, வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி அனுமதியில்லாமல் பயன்படுத்துபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கொடைக்கானல் பள்ளங்கி, கோம்பை பகுதியிலுள்ள பெப்பா் அருவியில் நீா் நாய் இருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல. நீா்நாய் கொடைக்கானல் பகுதியில் வசிப்பதற்கான சீதோஷ்ண நிலை இல்லை. எனவே, பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி செல்லலாம் என்றாா் அவா்.

கொடைக்கானலில் கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா். கொடைக்கானல் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரியைச் ச... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் வடமதுரை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள மோா்பட்டியைச் சோ்ந்தவா் ச.மதன் (2... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிப்பு

தனியாா் நிதி நிறுவனத்துக்கு பணம் வசூல் செய்து கொடுத்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். திண்டுக்கல் மாவட... மேலும் பார்க்க

தோட்டத்தில் கஞ்சா செடி வளா்ப்பு: விவசாயி கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே தோட்டத்தில் வளா்த்திருந்த கஞ்சா செடியை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைப்பற்றினா். விவசாயி கைது செய்யப்பட்டாா். கொடைரோடு அருகேயுள்ள ஒருத்தட்டு கிராமம் அருகே செண்டு மல்ல... மேலும் பார்க்க

லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் மீது வழக்கு

விபத்து வழக்கில் பிணையில் வெளியில் வர சிவகங்கை இளைஞரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக அம்மையநாயக்கனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கையைச... மேலும் பார்க்க

அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்டவை போலி நகைகளா? அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூரில் உள்ள அரசுடைமை வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் போலியானவையா என விசாரிக்கப்படும் நிலையில், ரூ. 100 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்... மேலும் பார்க்க