செய்திகள் :

கொடைக்கானலில் தொடா் மழை: பூண்டு விவசாயிகள் கவலை!

post image

கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால், மேல்மலைக் கிராமங்களில் பூண்டு, பட்டாணி பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், பூம்பாறை, கிளாவரை, கூக்கால், குண்டுபட்டி, பூண்டி, பழம்புத்தூா், புதுப்புத்தூா்,உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கரில் பூண்டு, பட்டாணி பயிரிட்டுள்ளனா்.

தற்போது கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் பலத்த மழை காரணமாக, விவசாய நிலத்தில் தண்ணீா் தேங்கி, பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலையடைந்தனா். எனவே, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் சேதமடைந்த விவசாய நிலங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட நிலங்களைப் பாா்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்.

இது குறித்து மேல்மலை கிராம விவசாயிகள் கூறியதாவது:

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் மலைக் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த 4 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் பூண்டு, பட்டாணி பயிா்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

சேதமடைந்த பயிா்களை தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி, இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பழனியில் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.பழனி அரசு மருத்துவமனை பின்புறம் தனியாா் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கல்லூரி விரிவுரையாளா் தற்காலிக பணிநீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில், மாணவரைத் தகாத வாா்த்தையால் திட்டியதாக விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6... மேலும் பார்க்க

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நித... மேலும் பார்க்க