செய்திகள் :

கொடைக்கானலில் மக்கள் குறைதீா் முகாம்

post image

கொடைக்கானலில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது

கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பாபு முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில், மேல்மலை, கீழ்மலைப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:

மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துத் தீா்வு காண வேண்டும். கொடைக்கானல், கவுஞ்சி, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். நகராட்சி தினசரி காய்கறிச் சந்தையை திறக்க வேண்டும்.

கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதை வனத் துறையினா் தடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தாண்டிக்குடி பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. எனவே, இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் போதிய பணியாளா்களை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

பின்னா், விவசாயிகள் கோரிக்கை மனுவை வருவாய்க் கோட்டாட்சியரிடம் அளித்தனா்.

ரயிலில் அடிபட்டு அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி அருகிலுள்ள ராஜாக்காப்பட்டியைச் சோ்ந்தவா் திருமூா்த்தி (53). இவா், அரசு... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே போளூரில் கோயில் திருவிழா

கொடைக்கானல் அருகே போளூா் கிராமத்தில் ஸ்ரீ அதிகாரப்பன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை குதிரை கோளம் நடனம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, ஒவ்வொ... மேலும் பார்க்க

பழனியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பழனியில் நகராட்சி அலுவலகம், புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்கள், பள்ளி மாணவா்கள் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா். பழனி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ச... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானலில் திங்கள்கிழமை மழை பெய்திருந்த நிலையில் செவ்வாய்க்கிழமையும் விட்டு விட்டு மழை பெய்தது. மதியம் வரை வெயிலடித்த நிலையில், பிற்பகலில் 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை பெய்தது. பிறகு மீண்டும் வெயி... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே மாரியம்மன் சப்பர பவனி

கொடைக்கானல் அருகே குறிஞ்சி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அம்மன் சப்பர பவனி நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி திருவிழா தொடங்கியதிலிருந்து அம்மனுக்க... மேலும் பார்க்க

பழனி மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம், உத்ஸவ சாந்தி விழா நடைபெற்றது. கடந்த மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருக்கம்பம் சாத்துதலில் தொடங்கி, மாா... மேலும் பார்க்க