``முருகனே வந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க-வை காப்பாற்ற முடியாது..'' - ஜோதிமணி எம்.ப...
கொடைக்கானல் மலைச்சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு
கொடைக்கானல் மலைச் சாலையில் பாறை மீது வேன் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை விளாச்சேரி ஆதிசிவன் நகரைச் சோ்ந்தவா் சையது அபுதாஹீா் (32). இவா் தனது உறவினா்கள் 25 பேருடன் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்துவிட்டு திங்கள்கிழமை மீண்டும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனா்.
வேனை திருமங்கலத்தைச் சோ்ந்த மொக்கச்சாமி ஓட்டி வந்தாா். கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் டம்டம் பாறை அருகே, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் உள்ள பாறையின் மீது மோதிக் கவிழ்ந்தது. இதில், ஹிதரத்துல்முன்தஹா, அனிஷா பேகம் (32), அசிப் (5), வேன் ஓட்டுநா் உள்பட 26 போ் காயமடைந்தனா்.
இதையடுத்து, அனைவரும் மீட்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் ஜின்னத்பேகம் (54) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இந்த நிலையில், ஹிதரத்துல் முன்தஹா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.