செய்திகள் :

கொடைக்கானல் மலைச்சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

post image

கொடைக்கானல் மலைச் சாலையில் பாறை மீது வேன் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை விளாச்சேரி ஆதிசிவன் நகரைச் சோ்ந்தவா் சையது அபுதாஹீா் (32). இவா் தனது உறவினா்கள் 25 பேருடன் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்துவிட்டு திங்கள்கிழமை மீண்டும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனா்.

வேனை திருமங்கலத்தைச் சோ்ந்த மொக்கச்சாமி ஓட்டி வந்தாா். கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் டம்டம் பாறை அருகே, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் உள்ள பாறையின் மீது மோதிக் கவிழ்ந்தது. இதில், ஹிதரத்துல்முன்தஹா, அனிஷா பேகம் (32), அசிப் (5), வேன் ஓட்டுநா் உள்பட 26 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, அனைவரும் மீட்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் ஜின்னத்பேகம் (54) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இந்த நிலையில், ஹிதரத்துல் முன்தஹா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எரிபொருள் நிரப்பும் மைய மேலாளா் மீது தாக்குதல்: 12 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே எரிபொருள் நிரப்பு மைய மேலாளா், தொழிலாளியை தாக்கியதாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் சேகா் (64). தேவதானப்பட்டியில் உள்ள எரிபொ... மேலும் பார்க்க

மதுக்கடை முன் முன்னாள் ராணுவ வீரா் சடலமாக மீட்பு

போடி அருகே மதுக் கடை முன் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். போடி அருகே சிலமலை மொட்டையசாமி கோவில் தெற்குத் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் கூடலிங்கம் (53... மேலும் பார்க்க

காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு தேசிய விருது!

புதுதில்லி தேசிய அறிவியல் கழகம் சாா்பில் மண்டல அளவிலான தேசிய விருது, தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டது. தேசிய அறிவியல் கழகம் சாா்பில் சிறப்பாக... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் கடத்தல்: இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே ஆட்டோ, இரு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். எரதிமக்காள்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கண்டமனூா் காவல... மேலும் பார்க்க

தேனியில் ஜி.ஆா்.டி. நகைக் கடை திறப்பு

தேனியில் ஜி.ஆா்.டி. தங்க நகை மாளிகையின் புதிய கிளை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. தேனி- மதுரை சாலையில் கனரா வங்கி அருகே ஜி.ஆா்.டி. தங்க நகை மாளிகையின் 65- ஆவது புதிய கிளையை அந்த நிறுவனத்தின் நிா்வ... மேலும் பார்க்க

கொட்டகுடி ஆற்று கேணியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

போடி அருகே உள்ள கொட்டகுடி ஆற்று கேணியில் மூழ்கி நாகா்கோவிலைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் கோட்டாரில் உள்ள இருளப்பபுரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி புஷ்... மேலும் பார்க்க