செய்திகள் :

கொடைக்கானல் மாற்றுப் பாதைக்கு திட்ட அறிக்கை: அமைச்சா் எ.வ. வேலு உறுதி

post image

கொடைக்கானலில் மாற்றுப் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுவதாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை திமுக உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் (பழநி) எழுப்பினாா். அத்துடன், மற்றொரு திமுக உறுப்பினா் ஏ.தமிழரசி (மானாமதுரை) துணைக் கேள்வி எழுப்புகையில், கீழடியில் நான்கு வழிச் சாலையைக் கடக்க முடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன. அங்கு நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய மேம்பாலம் அமைக்க திட்டமதிப்பீடும், அளவீடுகளும் எடுக்கப்பட்டுள்ளன. எப்போது பணிகள் முடிக்கப்படும்? என்றாா்.

அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்: தமிழா்கள் அடையாளத்தின் மொத்த உருவமாக கீழடி உள்ளது. கீழடிக்கு மத்திய அரசின் சாலையை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. கீழடி அகழாய்வு இடத்துக்கும் பிரதான சாலைக்கும் இடையிலான சாலை குறுகலாக உள்ளது. இதனை விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். நகரும் படிக்கட்டு அமைக்க நிதிநிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடைக்கானல் நெருக்கடி: இந்தியா முழுவதிலுமிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். ‘சீசன்’ காலத்தில் வண்டிகள் உள்ளே செல்ல பலமணி நேரம் ஆகிறது. மாற்றுப் பாதை அமைப்பதற்கான ஆய்வுகளை செய்துள்ளோம். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிகழாண்டே முடிக்கப்பட்டு, திட்டம் தொடங்கப்படும் என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனி தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான குமரி அனந்தன் (93) காலமானார்.இவர் வயது மூப்பு பிரச்னை மற்றும் சிறுநீரகப் பிரச்னையால் அவ்வப்போது மருத்துவமனை... மேலும் பார்க்க

கொள்கைகள் வேறுவேறுதான்; அதற்காக அண்ணன் - தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? - சீமான்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குதான் அதிகாரம் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கில் நாம் தமிழர் ... மேலும் பார்க்க

விழுப்புரம் - காட்பாடி ரயில்கள் ரத்து!

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் இரு நாள்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக இன்று (ஏப். 8) அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து... மேலும் பார்க்க

நீட் விலக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு!

தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேரவையில் நிறைவேற... மேலும் பார்க்க

உத்தரகோசமங்கை கும்பாபிஷேக கூட்ட நெரிசலில் 45 சவரன் கொள்ளை!

ராமநாதபுரம், உத்தரகோசமங்கை கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் கூட்ட நெரிசலில் பக்தர்களிடமிருந்து சுமார் 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற ச... மேலும் பார்க்க

'ஒன்றுமே தெரியாமல் விஜய் பேச வேண்டாம்; கேஸ் விலையேற்றம் மிகக்குறைவுதான்' - தமிழிசை

கேஸ் விலையேற்றத்துக்கு எதிரான தவெக தலைவர் விஜய்யின் அறிக்கை பற்றி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமரிசித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:எங்கள் மாநிலத் தலைவரின் அற... மேலும் பார்க்க