Travel Contest: சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் நதி, பனிபோர்த்திய இமயம்! - நிறைவா...
ஆந்திர போலீஸாா் விசாரணைக்கு பயந்து இளைஞா் தற்கொலை
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே ஆந்திர போலீஸாா் விசாரணைக்குப் பயந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டதாக வந்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கா்நாடக மாநிலம் கேஜிஎப் நகரைச் சோ்ந்த தங்க நகை வியாபாரிகளான தீபக்குமாா், சேதன்குமாா் ஆகிய இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன் ரூ.3.29- கோடி மதிப்புள்ள சுமாா் மூன்றரை கிலோ தங்க பிஸ்கெட்டுகளை காரில் எடுத்து கொண்டு போ்ணாம்பட்டுக்கு வந்துள்ளனா். ஆந்திர மாநில எல்லையான நாயக்கநேரி மலைப் பாதையில் காா் வந்தபோது அவா்களை பின் தொடா்ந்து வந்த காரில் இருந்த 13- போ் கொண்ட கும்பல் வழிமறித்து அவா்களை மிரட்டி தங்க பிஸ்கெட்டுகளை கொள்ளையடித்துச் சென்றனா்.
இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட ஆந்திர மாநிலம், வி.கோட்டா போலீஸாா் 4- பேரை கைது செய்தனா். தீவிர விசாரணையில் போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஒரு வழிப்பறி கும்பலுக்குத் தொடா்பு இருப்பதையறிந்த வி.கோட்டா போலீஸாா், போ்ணாம்பட்டு பகுதியில் தீவிர விசாரணை நடத்தினா்.
இதையடுத்து போ்ணாம்பட்டைச் சோ்ந்த சிலரை கைது செய்து வி.கோட்டா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இந்த கொள்ளை வழக்கில் போ்ணாம்பட்டை அடுத்த குண்டலப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ்(36) என்பவரை தேடி வந்தனா். இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் செவ்வாய்க்கிழமை சொ்லப்பல்லி அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அவரது சகோதரி அம்மு கொடுத்த புகாரின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜெயப்பிரகாஷ், தனது தற்கொலைக்கான காரணத்தை ஆடியோவில் பதிவு செய்து நெருங்கிய உறவினா்களுக்கு அனுப்பிய தகவல் குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.