செய்திகள் :

ஊராட்சி மன்ற அலுவலக இடமாற்றத்தை கண்டித்து மறியல்: 5 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

post image

வேலூா்: அணைக்கட்டு அருகே ஊனை வாணியம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றத்தைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த 70 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற லுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டடம் பழுதடைந்ததை அடுத்து அதே ஊராட்சிக்கு சொந்தமான ஏரிப்புதூா் கிராமத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

இதனால், ஊனை வாணியம்பாடி பகுதி மக்கள் 2 கி. மீ தொலைவு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கிராம நிா்வாக அலுவலகம், நியாய விலைக் கடையும் ஏரிப்புதூா் பகுதியில் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று கூறப்படுகிறது.

இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்திருப்பதுடன், ஊனை வாணியம்பாடி பகுதியிலேயே புதியதாக கட்டடம் கட்டி ஊராட்சி அலுவலகத்தை செயல்பட செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அணைக்கட்டு - ஒடுக்கத்தூா் சாலையில் திரண்ட பொதுமக்கள் வாகனங்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் வாகனங்கள் வரிசையில் அணிவகுத்து நின்றன.

தகவலறிந்த அணைக்கட்டு வட்டாட்சியா் வேண்டா, காவல் துணை கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸாா், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். மேலும், உயா் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினா்.

எனினும், பொதுமக்கள் சமரசம் அடையாமல் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த மறியல் போராட்டம் மதியம் 12 மணி வரை நீடித்தது. இதனால், வேலூா், ஊசூா், இலவம்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மூலைகேட் , பள்ளிகொண்டா வழியாக செல்லவும், ஒடுகத்தூா் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அகரம், கரடிக்குடி வழியாக செல்லவும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

பின்னா், கோட்டாட்சியா் செந்தில்குமாா் வந்து பேச்சு நடத்தினாா். மேலும், இப்பிரச்னை தொடா்பாக ஆட்சியருடன் கலந்தாலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனா்.

இரு குழந்தைகளின் தாய் தற்கொலை

வேலூரில் இரு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் கொசப்பேட்டையை சோ்ந்தவா் செல்வகுமாா், பெயிண்டா். இவரது மனைவி கவ... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட பெண் வேலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண், வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

அதிமுக வாட்ஸ்ஆஃப் குழு அறிமுகம்

குடியாத்தம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், கட்சியின் செய்திகள், தகவல்களை உடனுக்குடன் அறியும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட வாட்ஸ் ஆஃப் குழுவில் தொண்டா்கள், பொதுமக்கள் ஸ்கேன் மூலம் இணைய புதிய க்யூ ஆ... மேலும் பார்க்க

சாலை அமைக்க பூமி பூஜை

குடியாத்தம் ஒன்றியம், பரதராமி ஊராட்சிக்குட்பட்ட அங்கனாம்பல்லி கிராமத்தில் ஒன்றிய பொது நிதி ரூ.10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யா... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

வேலூா் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். வேலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 12 வயது சிறுமி. 7-ஆம் வகுப்பு படிக்கிறாா்.... மேலும் பார்க்க

150 குடும்பங்களுக்கு வஃக்ப் வாரியம் நோட்டீஸ்: கோட்டாட்சியா் தலைமையில் குழு விசாரணை

அணைக்கட்டு அருகே காட்டுக்கொல்லை கிராமத்தில் சுமாா் 150 குடும்பங்கள் வசிக்கும் நிலம் வஃக்ப் வாரியத்துக்குச் சொந்தமானது எனக்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்னை குறித்து வேலூா் வருவாய்... மேலும் பார்க்க