செய்திகள் :

உத்தரகோசமங்கை கும்பாபிஷேக கூட்ட நெரிசலில் 45 சவரன் கொள்ளை!

post image

ராமநாதபுரம், உத்தரகோசமங்கை கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் கூட்ட நெரிசலில் பக்தர்களிடமிருந்து சுமார் 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என்றும், முதன்முதலில் தோன்றிய சிவாலயம் என்ற பெருமையையும் பெற்ற உத்தரகோசமங்கை கோயிலில் ஏப்ரல் 4-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தைக் கண்டு களித்தனர்.

இந்த நிலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது. இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் மற்றும் கொள்ளையர்கள் கும்பாபிஷேகத்துக்கு வந்த பக்தர்களிடம் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

பக்தர்கள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 45 சவரன் நகைகள் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக உத்தரகோசமங்கை காவல் நிலையத்தில் அடுத்தடுத்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கொள்ளையர்களின் கைவரிசை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(ஏப். 16) கடிதம் எழுதியுள்ளார்.அக்கடி... மேலும் பார்க்க

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்கள... மேலும் பார்க்க

முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந... மேலும் பார்க்க

மலையேற்றம் மேற்கொள்வர்கள் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:த... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க