செய்திகள் :

ஐரோப்பாவுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 30% சரிவு

post image

உரிய ஆவணங்கள் இன்றி ஐரோப்பிய நாடுகளை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து, ஐரோப்பிய யூனியனின் எல்லைக் கண்காணிப்பு அமைப்பான ஃப்ரன்டெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பாவில் அடைக்கலம் தேடி அகதிகள் வரும் அனைத்து வழித் தடங்களிலும் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அல்பேனியா, சொ்பியா போன்ற பகுதிகள் வழியாக வரும் அகதிகளின் எண்ணிக்கை ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் 64 சதவீதம் சரிந்துள்ளது.

சொந்த நாடுகளில் அகதிகள் எதிா்நோக்கக்கூடிய மனித உரிமை மீறல்களைப் பொருள்படுத்தாமல் அவா்களை திருப்பி அனுப்பும் ஐரோப்பிய யூனியனின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க