செய்திகள் :

'ஒன்றுமே தெரியாமல் விஜய் பேச வேண்டாம்; கேஸ் விலையேற்றம் மிகக்குறைவுதான்' - தமிழிசை

post image

கேஸ் விலையேற்றத்துக்கு எதிரான தவெக தலைவர் விஜய்யின் அறிக்கை பற்றி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமரிசித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:

எங்கள் மாநிலத் தலைவரின் அறிக்கையைப் பாருங்கள், விஜய்யின் அறிக்கையையும் பாருங்கள். தெளிவாக எவ்வளவு ஏறியிருக்கிறது? எவ்வளவு குறைத்திருக்கிறோம்? இப்போது தவிர்க்க முடியாத காரணங்களால் விலை ஏற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சினிமா டிக்கெட் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது? பிரதமர் மோடி கறுப்புப் பணத்தை ஒழித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டது. இப்போது பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட் விலை என்ன?

விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன? இதை கட்டுப்படுத்தினீர்களா? 'பாமர மக்களுக்காக நடிக்கிறேன், சுயலாபமே கிடையாது' என்று சொல்லும் விஜய், பாமர மக்களுக்காக குறைந்த விலையிலோ இலவசமாகவோ டிக்கெட் கொடுக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்? உங்களுக்கு லாபமென்றால் பேசமாட்டீர்கள். அதனால் ஒன்றுமே தெரியாமல் விஜய் போன்றவர்கள் பேச வேண்டாம். பிளாக் டிக்கெட் மட்டுமன்றி சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது.

விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும் வசனம் பேசவும் நடனமாடவும் ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ பொருளாதாரமோ தெரியாது.

பிரதமர் மோடி ஒன்று செய்தார் என்றால் பொத்தாம்பொதுவாக செய்யமாட்டார். மகளிர் தினம் அன்று ஏன் கேஸ் விலை ரூ. 100 குறைத்தார்? மகளிர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று. சர்வதேச சந்தையில் 62 சதவிகிதத்துக்கு மேல் கேஸ் விலை ஏற்றமடைந்ததால் இன்று மிகக்குறைந்த அளவே ஏற்றியிருக்கிறார். ஆனால், அந்த விலையேற்றமும் வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை வைக்க இருக்கிறோம்.

கேஸ் விலை உயர்த்தப்பட்டதை திரும்பப்பெறுமாறு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவிருக்கிறோம் என்று கூறினார்.

இதையும் படிக்க | ஒட்டுமொத்த மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி: கனிமொழி

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(ஏப். 16) கடிதம் எழுதியுள்ளார்.அக்கடி... மேலும் பார்க்க

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்கள... மேலும் பார்க்க

முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந... மேலும் பார்க்க

மலையேற்றம் மேற்கொள்வர்கள் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:த... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க