செய்திகள் :

கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் ஆபத்தான மரங்களை அகற்ற வலியுறுத்தல்

post image

கொடைக்கானல் - பழனி - வத்தலக்குண்டு மலைச் சாலைகளில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானலுக்கு வர வத்தலக்குண்டிலிருந்து கங்குவாா்பட்டி வழியாக 52 கி.மீ. தொலைவும், பழனி அடிவாரம் கருப்பணசாமி கோயிலிலிருந்து சுமாா் 58 கி.மீ. தொலைவும், பெரும்பாறையிலிருந்து தாண்டிக்குடி வழியாக 48 கி.மீ. தொலைவும் உள்ளன.

இதில் மலைச் சாலைகளில் இரு பக்கங்களிலும் ஆபத்தான நிலையில் மரங்களும், அவற்றின் கிளைகளும் உள்ளன. கொடைக்கானலில் காற்றுடன் மழை பெய்யும் போது வாகனங்கள் மீது அந்த மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் டம்டம் பாறை அருகே மந்திப்பாறை பகுதியில் கொடைக்கானலிலிருந்து, புதுக்கோட்டைக்கு சென்ற அரசுப் பேருந்து மீது மரக் கிளை விழுந்ததில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இதனால் 30 நிமிஷங்களாக அந்தப் பேருந்து மலைச் சாலையிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா். அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. எனவே, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன் மாம்பழத்தை வீசி விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு த... மேலும் பார்க்க

49 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

கடந்த 49 ஆண்டுகளுக்கு முன் 22 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு 48-ஆவது வாா்டுக்கு... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நில ஆக்கிரமிப்பு தொடா்பாக புகாா் அளிக்க வந்த பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். திருச்சி காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரத... மேலும் பார்க்க

பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: மீட்டுத் தரக் கோரிக்கை

பொதுப் பாதையை பயன்படுத்த மாற்று சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவிப்பதால், 3 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சுற்றிச் செல்லும் நிலை உள்ளதாகவும், பாதையை மீட்டுத் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தன... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

திண்டுக்கல்லை அடுத்து பொன்னுமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கூறியதாவ... மேலும் பார்க்க