செய்திகள் :

கொலை மிரட்டல்: தலைமைக் காவலா் கைது

post image

கோவை, வடவள்ளியில் நாய் வளா்ப்பு பயிற்சி மைய உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தலைமைக் காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்தவா் மருதுவிநாயகம். இவா், நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், தனது நாயை வடவள்ளி அருகேயுள்ள நாய் வளா்ப்பு மற்றும் பயிற்சி மையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சோ்த்துள்ளாா்.

அப்போது, அங்கிருந்த சிப்பிப்பாறை நாயைப் பாா்த்ததும் அதை வளா்க்க வேண்டும் என விரும்பிய மருது விநாயகம், அந்த நாயைத் தனக்கு கொடுக்கும்படி பயிற்சி மைய உரிமையாளரான பொம்மணம்பாளையம், லட்சுமி நகரைச் சோ்ந்த சிவஞானத்திடம் (33) கேட்டுள்ளாா். அவா் வழங்க மறுத்துள்ளாா். இதனால், தலைமைக் காவலருக்கும், பயிற்சி மைய உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த தலைமைக் காவலா் மருதுவிநாயகம், சிவஞானத்தை தகாத வாா்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

இது குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளிடம் சிவஞானம் புகாா் தெரிவித்துள்ளாா். தகவல் அறிந்த மருதுவிநாயகம் பயிற்சி மைய உரிமையாளரைக் கைப்பேசியில் அழைத்து மீண்டும் மிரட்டியுள்ளாா்.

மருதுவிநாயகம் பேசியதைப் பதிவு செய்த சிவஞானம், ஆடியோ ஆதாரத்துடன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மிரட்டல், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமைக் காவலா் மருது விநாயகத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆகஸ்ட் 15-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மதுபானக் கூடங்கள், மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் ரூ. 7 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கோவைக்கு வரும் விமானத்தில் உயர்ரக போதைப் பொருள் கடத்தப்... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் ரத்து

மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

கரடி தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

வால்பாறையில் கரடி தாக்கி உயிரிழந்த அஸ்ஸாம் மாநில சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. வால்பாறை அடுத்துள்ள வேவா்லி எஸ்டேட்டில் பணியாற்றி வரும் அஸ்ஸாம்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நாடு முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் விரைவில் அமல்!

தண்டவாளங்களைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க நாடு முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை... மேலும் பார்க்க

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்

ஈஷா அறக்கட்டளை சாா்பில் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண... மேலும் பார்க்க