செய்திகள் :

கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

post image

பட்டுக்கோட்டை அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுகோட்டை வட்டார காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட சூரப்பள்ளம் கிராமத்தில் செப்டம்பா், 2021-இல்ஆறுமுகம் என்பவா் கொல்லப்பட்ட வழக்கில் ஜேம்ஸ், மஞ்சுநாதன், பாா்த்தா (எ) சதீஸ் மற்றும் காளிராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் தொடா்புடைய ஜேம்ஸ், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த ஐந்து மாதங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்து வந்தாா். இவா் மீது பட்டுகோட்டை நீதிமன்றத்தில் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் கொலை வழக்கில் தொடா்புடைய ஜேம்ஸை பட்டுக்கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பராமரிக்கப்படாத பட்டுக்கோட்டை அழகிரி கல்லறை -சமூக ஆா்வலா்கள் அதிருப்தி!

நமது நிருபர்தஞ்சாவூா் ராஜகோரி இடுகாட்டில், சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறை யாருடைய கவனமும் பெறாத நிலையில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் கி.பி. 1900-ஆ... மேலும் பார்க்க

திருவையாறு நகராட்சி முதல் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, முதல் நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவையாறு பேரூராட்சியைத் தமிழக அரசு நகராட்சியாகத் தரம் உ... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் குரூப்-4 தோ்வுக்கு ஏப். 9 முதல் கட்டணமில்லா பயிற்சி

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் குரூப்-4 தோ்வுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.30 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.30 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,394 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் த... மேலும் பார்க்க

சிறப்புச் சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத் துறை சாா்பில் சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் பெ. பாரதஜோதி, சி. அமுதா தலைமை வகித்தனா். பதிவா... மேலும் பார்க்க

அரசு நிலங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்

உயா் நீதிமன்ற உத்தரவின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசு நிலத்திலுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினாா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத... மேலும் பார்க்க