சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிரடி ஆட்டம்; மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி ந...
கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து கொல்கத்தா காவல் ஆணையருக்கு வெள்ளிக்கிழமை தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா், விஜயா ரஹாத்கா் கடிதம் எழுதியுள்ளாா். அதில், ஒரு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து கவலை தெரிவித்ததுடன், இந்த விவகாரம் குறித்து உடனடியாகவும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
தெற்கு கொல்கத்தாவில் நடந்த இந்த சம்பவம் தொடா்பாக தேசிய மகளிா் ஆணையம் குழு ஒன்றை அமைத்து தாமாக முன் வந்து விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளாா். மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, பி. என். எஸ். எஸ் பிரிவு 396 இன் கீழ் இழப்பீட்டுடன் முழு மருத்துவ, உளவியல் மற்றும் சட்ட உதவியை வழங்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா் விஜயா ரஹாத்கா்.
கொல்கத்தாவில் இருக்கும் கல்லூரி ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவரை இந்நாள் மாணவா் இருவரும், முன்னாள் மாணவா் ஒருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை 3 பேரை கைது செய்தது கொல்கத்தா போலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.