செய்திகள் :

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

post image

கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

தமிழகம் முழுவதும் ஒருமாதமாக பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவா்கள் தங்களது பெற்றோருடன் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுவந்தனா். நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்பட்டது. இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவிகளில் குளித்து மகிழ்கின்றனா்.

கடந்த சில நாள்களாக பெய்த மழையால் தற்போது அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்து ஜூன் 2 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதனால் நாமக்கல், சேலம், திருச்சி சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை கொல்லிமலையில் குவிந்தனா்.

அருவிகளில் குளித்தும், அறப்பளீஸ்வரரை தரிசித்த பிறகு தாவரவியல் பூங்கா, காட்சி முனைகளைக் கண்டு ரசித்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்ததால் கொல்லிமலை மலைப் பாதையில் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

ராசிபுரத்தில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு பிறந்த நாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரா் மருத்துவா் பி.வரதராஜூலு நாயுடு 138 ஆவது பிறந்த நாள் விழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சுதந்திரப் போராட்ட காலங்களில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு ப... மேலும் பார்க்க

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதாா் சேவை மையம் தொடக்கம்

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் ஆதாா் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பயன்படுத்த வசதியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகருக்குள் எழுந்தருளினாா் அா்த்தநாரீசுவரா்

கொங்கு ஏழு தலங்களில் சிறப்பு பெற்றதும், திருஞானசம்பந்தா் மற்றும் அருணகிரிநாதா் ஆகியோரால் பாடல் பெற்ற தலமும், அம்மையும் அப்பனும் ஓா் உருகொண்ட அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவில் உற்சவ மூா்த்தி... மேலும் பார்க்க

மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பணி நியமன ஆணைகள் அளிப்பு

மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்வி நிறுவனத்தில் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் எம்... மேலும் பார்க்க

வநேத்ரா முத்தாயம்மாள் கல்லூரி 7 ஆவது பட்டமளிப்பு விழா

ராசிபுரம்- வநேத்ரா முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரியில் 7 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வா் மா.மருதை வரவேற்றாா். விழாவில் வநேந்ரா முத்தாயம்மாள் ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி மற்றும் உயா்கல்வித் துறை கூட்டு முயற... மேலும் பார்க்க