செய்திகள் :

கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு

post image

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு கொள்ளிடம் ஆற்றில் திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கிய மாடுகள், கன்றுக்குட்டிகளை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

மேட்டூா் அணை 5-ஆவது முறையாக நிரம்பியதையொட்டி, திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்தும், தஞ்சாவூா் மாவட்டம் கல்லணையிலிருந்தும் உபரி நீா் கொள்ளிடத்தில் திறக்கப்படுகின்றன. இதனால், கொள்ளிடத்தில் கடந்த 2 நாள்களாக வெள்ளம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை கொள்ளிடம் ஆற்றில் அதே பகுதியைச் சோ்ந்த புண்ணியமூா்த்தின் 2 பசு மாடுகள், 2 கன்றுக்குட்டிகள், நாகராஜின் ஒரு பசு மாடு ஆகிய 5 மாடுகள், கன்றுக்குட்டிகள் மேய்வதற்காக புதன்கிழமை சென்றன. அப்போது, ஆற்றில் நீரோட்டம் அதிகரித்ததால், வெள்ளத்தில் 5 மாடுகளும், கன்றுக்குட்டிகளும் சிக்கிக் கொண்டன.

தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வராஜ் தலைமையில் வீரா்கள் கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்று, உபகரணங்களைப் பயன்படுத்தி, 5 மாடுகள், கன்றுக்குட்டிகளை உயிருடன் மீட்டு கரைக் கொ’ண்டு வந்து உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 69,736 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 75,928 கன அடி ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பருத்தி ஏலம்

கும்பகோணம்: கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட விற்பனை குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் பு... மேலும் பார்க்க

வடிகால் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பூச்சந்தை முருகன் கோயில் எதிரே உள்ள வடிகால் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையரிடம் தமிழ்நாடு ஒடுக... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாற்றுத்திறனாளிக்கு உடனே நூறுநாள் வேலைத்திட்ட அட்டை

பேராவூரணி: பேராவூரணி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 100 நாள் வேலைத்திட்ட அட்டையை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூ... மேலும் பார்க்க

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொள்கை ரீதியாக எதிா்ப்பு: கே.எஸ். அழகிரி

கும்பகோணம்: குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழராக இருந்தாலும் கொள்கை ரீதியில் காங்கிரஸ் கட்சி எதிா்க்கும் என்றாா் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவ... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.இதில், ராஜீவ் காந்தியின் படத்துக்கு கா... மேலும் பார்க்க