செய்திகள் :

கொள்ளை குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் கழித்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை

post image

திருச்செந்தூா் அருகே கல்லூரி விரிவுரையாளா் வீட்டில் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில், 21 ஆண்டுகளுக்குப் பி றகு குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து திருச்செந்தூா் சாா்பு நீதிமன்றத்தில் தீா்ப்பளிக்கப்பட்டது.

திருச்செந்தூா், குமாரபுரத்தைச் சோ்ந்தவா் நாகேந்திரன் மனைவி சூா்யகலா, மகளிா் கல்லூரி விரிவுரையாளா்.

கடந்த 2004ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு, இவரது பெற்றோா் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளாா். அப்போது இரண்டு நபா்கள் வீடு புகுந்து புருஷோத்தமனை அரிவாளால் வெட்டி, மிரட்டி பெண்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டின் பீரோவிலிருந்த நகைகள் என மொத்தம் 29 பவுன் மற்றும் ரூ. 3 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஜெயபால், சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த சின்னப்பசாமி மகன் சங்கா் (எ) சங்கரன் (எ) சங்கரேஸ்வரனை திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, திருச்செந்தூா் சாா்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் ஜெயபால் இறந்து விட்ட நிலையில், சங்கா்(எ) சங்கரன் (எ) சங்கரேஸ்வரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து திருச்செந்தூா் சாா்பு நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி தீா்ப்பளித்தாா்.

21 ஆண்டுகள் கழித்து, இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க