செய்திகள் :

கோடைகாலத்தில் அதிகம் பருகப்படும் இளநீர் - தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது தெரியுமா?

post image

வெயில் காலம் வந்ததும் பலரின் பிரதான பானமாக இருப்பது இளநீர் தான். இளநீர் உடலின் சூட்டை தணிக்கும் என்று பலரும் கோடைகாலத்தில் இதனை பருகுவார்கள்.

மற்ற பழங்களில் இருந்து அதனை பிழியும் போது சாறு வருகிறது, அதனை பருகுவோம். ஆனால் இளநீரில் மட்டும் எப்படி அதனுள் தண்ணி இருக்கிறது என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? இதற்கான பதில் ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய உயிரியல் தொழில்நுட்ப தகவல் மையம் சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. அதில் தேங்காயின் உள் எப்படி தண்ணீர் இருக்கிறது என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின்படி மரத்தில் உள்ள வாஸ்குலார் அமைப்பு மூலம் நீர் வேர்களில் இருந்து தேங்காய்க்குச் செல்வதாக தெரியவந்துள்ளது.

அதாவது தென்னை மரத்தின் வேர்கள், மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்கள் கொண்ட நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. அதன் பின்னர் இந்த நீர் தண்டு வழியாக மேல் நோக்கி சென்று இறுதியாக தேங்காயை அடைகிறது.

தேங்காயின் எண்டோகார்ப் அமைப்பு தண்டிலிருந்து வரும் நீரை சேமிக்கிறது.

இந்த ஊட்டச்சத்து நிறைந்த நீர், இளநீர் ஆக மாறி அது முதிர்ச்சியடையும் போது ஒரு வெள்ளை வழுக்கையை அதாவது தேங்காயை உருவாக்குகிறது.

இயற்கையாகவே மரத்திலிருந்து இந்த தேங்காய் நீர் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடு: முதுகு, கை, கால் வலி வராமல் இருக்க... உங்கள் வீட்டு கிச்சனில் இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

ஒரு வீட்டில் கிச்சன் என்பது முக்கியமான அங்கம். அதன் வடிவமைப்பு சரியாக இருந்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம். கிச்சன் வடிவமைப்பிற்கு சில விதி முறைகள் உள்ளன அவற்றை தெளிவாக விளக்குகிறார் சென்னையைச் சேர்... மேலும் பார்க்க

Vikatan Play contest : அட எப்படி சிங்கிள் லைனில் எழுதி கலக்கியிருக்கிறார்கள்? | ஒன்று: காதல் கதைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

தங்களை விடாமல் துரத்தும் வீட்டு வேலைகள் குறித்து, ‘நானெல்லாம் செத்தாலும், எங்க வீட்டுல சமைச்சு வெச்சுட்டுத்தான் போய் சுடுகாட்டுல படுத்துக்கணும்’ என்று வேடிக்கையாக பெண்களில் சிலர் சொல்வதுண்டு. அவை, வேத... மேலும் பார்க்க

சென்னையில் ஒரு நாள்! - குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Nudist: "இந்த கடற்கரைகளுக்கு ஆடை அணிந்துவரத் தடை" - ஜெர்மனி போட்ட புதிய விதி என்ன தெரியுமா?

ஜெர்மனியில் இயற்கை வாழ்வியலை ஆதரிக்கும் மக்கள் பயன்படுத்தும் நிர்வாண கடற்கரைகளில் உடையணிந்து செல்பவர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடற்கரை நகரமான ரோஸ்டாக்கில் அமல்படுத்தப்... மேலும் பார்க்க