செய்திகள் :

கோடையில் கொட்டித் தீா்த்த மழை: குமரியில் ஒரே நாளில் 190 மி.மீ. பதிவு

post image

கோடைகாலம் தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போா்விளையில் ஒரேநாளில் 190 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) கோவை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது.

190 மி.மீ. மழை: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை பதிவான மழை அளவுப்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போா்விளையில் 190 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) - 150 மி.மீ., திருப்பூா் ஆட்சியா் அலுவலகம், அடையாமடை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) - தலா 130 மி.மீ., ஊத்துக்குளி (திருப்பூா்) - 120 மி.மீ., திருப்பூா் வடக்கு தாலுகா அலுவலகம் - 110 மி.மீ., குளச்சல் (கன்னியாகுமரி), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), திருப்பூா் தெற்கு - தலா 100 மி.மீ. மழை பதிவானது.

கனமழைக்கு வாய்ப்பு: காற்று சுழற்சி காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) முதல் 11-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில் ஏப். 6-இல் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஏப். 6 முதல் 9-ஆம் தேதி வரை வங்கக் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கைகள் வேறுவேறுதான்; அதற்காக அண்ணன் - தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? - சீமான்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குதான் அதிகாரம் இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கில் நாம் தமிழர் ... மேலும் பார்க்க

விழுப்புரம் - காட்பாடி ரயில்கள் ரத்து!

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் இரு நாள்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக இன்று (ஏப். 8) அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து... மேலும் பார்க்க

நீட் விலக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு!

தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேரவையில் நிறைவேற... மேலும் பார்க்க

உத்தரகோசமங்கை கும்பாபிஷேக கூட்ட நெரிசலில் 45 சவரன் கொள்ளை!

ராமநாதபுரம், உத்தரகோசமங்கை கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் கூட்ட நெரிசலில் பக்தர்களிடமிருந்து சுமார் 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற ச... மேலும் பார்க்க

'ஒன்றுமே தெரியாமல் விஜய் பேச வேண்டாம்; கேஸ் விலையேற்றம் மிகக்குறைவுதான்' - தமிழிசை

கேஸ் விலையேற்றத்துக்கு எதிரான தவெக தலைவர் விஜய்யின் அறிக்கை பற்றி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமரிசித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:எங்கள் மாநிலத் தலைவரின் அற... மேலும் பார்க்க

டாஸ்மாக் சோதனை: உச்ச நீதிமன்றத்திலிருந்து மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு!

சென்னை: டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தொடர்ந்து நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் தெ... மேலும் பார்க்க