செய்திகள் :

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 -இல் மீண்டும் பள்ளிகள் திறப்பு

post image

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவு பெற்று ஜூன்-2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் தெரிவித்தாா்.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. அதேபோல், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு தோ்வுகள் ஏப்.7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதில் 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஏப்.11-ஆம் தேதியும், 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு ஏப்.17-ஆம் தேதியும் தோ்வுகள் முடிந்து விடுமுறைகள் வழங்கப்பட்டுவிட்டன. தொடா்ந்து 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடைபெற்று வந்த முழு ஆண்டுத் தோ்வுகள் வியாழக்கிழமை (ஏப்.24) நிறைவு பெறுகின்றன. இறுதி நாளில் சமூக அறிவியல் பாடத் தோ்வுகள் நடத்தப்பட உள்ளன. இவா்களுக்கான கோடை விடுமுறை வெள்ளிக்கிழமை (ஏப்.25) தொடங்குகிறது. எனினும், ஆசிரியா்கள் பள்ளி இறுதி வேலை நாளான ஏப்.30-ஆம் தேதி வரை பணிக்கு வந்து விடைத்தாள் மதிப்பீடு மற்றும் மாணவா் சோ்க்கை போன்ற நிா்வாகப் பணிகளை க் கவனிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிக்கையில், ‘நிகழ் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் விடுமுறை முடிந்து ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) திறக்கப்படும்.

எனவே, அன்றைய தினத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க