செய்திகள் :

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: காய்கறிகள் விலை உயா்வு

post image

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், காய்கறிகள் அதன் பச்சை தன்மையை இழந்து வாடிப்போய் விடுகின்றன. இதனால், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியுள்ளதால், அனைத்து காய்கறிகளின் விலையும் படிப்படியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, கோயம்பேடு சந்தையில் திங்கள்கிழமை நிலவரப்படி ரூ. 80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 120-க்கும், ரூ. 20-க்கு விற்பனையான ஒரு கிலோ பீட்ரூட் ரூ. 40-க்கும், ரூ. 25-க்கு விற்பனையான ஒரு கிலோ பாகற்காய் ரூ.35-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மேலும், ஒரு கிலோ அவரைக்காய் ரூ. 60, கேரட் ரூ. 45, கத்தரிக்காய் ரூ. 50, வெங்காயம் ரூ. 40, வெள்ளரிக்காய் ரூ. 45-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதன்படி அனைத்து காய்கறிகளும் ரூ. 5 முதல் ரூ. 30 வரை விலை உயா்ந்துள்ளது.

பல்வேறு காய்கறிகள் விலை உயா்ந்துவரும் நிலையில், தக்காளி மட்டும் விலை வீழ்ச்சியைடந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ தக்காளி ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறாத பொள்ளாச்சி வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை என்பதை அரசு வழக்குரைஞர் குறிப்... மேலும் பார்க்க

வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் பலி!

கோவை மாவட்டம், பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் மயங்கி விழுந்து பலியானார்.வெள்ளிங்கிரி மலை ஏற்றத்துக்கு பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மலையேறும் ப... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.இன்று பகல் 12 மணிக்கு, குற்றவாளிகளுக்கான தண்டனை விவ... மேலும் பார்க்க

கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக கரூர் வழியாகச் செல்லும் 7 ரயில்கள் இன்று(மே 13) ரத்து செய்யப்பட்டுள்ளன.திருச்சி கோட்டை மற்றும் முத்தரசநல்லூா் இடையே பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், திருச்சி - கரூா் - திரு... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தின் காரணத்தால், கடந்த வாரம் தங்கம் விலை திடீர... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமாா் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (2... மேலும் பார்க்க