செய்திகள் :

கோத்தகிரி: ஒருபக்கம் சுருக்கு கம்பி, மறுபக்கம் மின்கம்பி - துடிதுடித்து இறந்த 2 கரடிகள்

post image

வனத்துக்கும் வன உயிரினங்களுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நீலகிரியில் வன விலங்குகள் இயற்கைக்கு மாறாக உயிரிழக்கும் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வேட்டைக்கு அடுத்தபடியாக சுருக்கு கம்பிகள் மூலம் வனவிலங்குகளை வேட்டையாடும் போக்கும் கட்டுபடுத்த முடியாத நிலையில் இருக்கிறது.

எரியூட்டப்படும் கரடியின் உடல்

இந்த நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள தீனட்டி செல்லும் சாலை அருகில் சோலார் மின் வேலியில் சிக்கி கரடி ஒன்று பரிதாபமாக இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்திருக்கிறது. வனத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொள்கையில், சோலார் மின் வேலியில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த சுருக்கு வலை கம்பியில் சிக்கி அந்த கரடி துடிதுடித்து உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். அது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் கோத்தகிரி அருகில் உள்ள அரவேணு குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று இறந்து கிடப்பதாக நேற்று காலை கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. அந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் ஆண் கரடி ஒன்று பரிதாபமாக உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். இது குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுருக்கு வைத்து கொல்லப்பட்ட கரடி.

இது குறித்து நீலகிரி வனத்துறையினர், " சீனிவாசா எஸ்டேட் மின் வேலியில் சுருக்கு கம்பி வைத்து கரடியை கொன்ற வழக்கில் வினோத் குமார் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அதேபோல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கரடியின் உடலை கூறாய்வு செய்து மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். சுருக்கு கம்பி வைக்கும் நபர்களுக்கு எதிராக தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம்" என்றனர்.

ஈரோடு: பெண் குழந்தை கடத்தல், வேதனையில் பெற்றோர்; போலீஸார் தீவிர விசாரணை - நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், சித்தோடு கோணவாய்க்கால் என்ற இடத்தில் மேம்பாலத்துக்கு அடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவெங்கடேஷ்,கீர்த்தனா தம்பதி,கடந்த சில மாதங்களாக அங்கு தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். ... மேலும் பார்க்க

தீபாவளி வசூல்: `கட்டுக் கட்டாக பணம், பட்டுப்புடவைகள்' -வட்டார போக்குவரத்து அலுவலக ரெய்டில் அதிர்ச்சி

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தீபாவளி விழா லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழகம் முழுவ... மேலும் பார்க்க

டிஜிட்டல் கைது; ரூ.58 கோடியை இழந்த 72 வயது தொழிலதிபர் - மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த இணைய குற்றங்களால் அதிக அளவில் முதியவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். புதிதாக 72 வயது முதியவ... மேலும் பார்க்க

தீபாவளி வசூல்: பட்டாசு ஆலை, கடைகளில் லட்சக்கணக்கில் வசூல் - விருதுநகரில் பிடிபட்ட தீயணைப்பு வீரர்கள்

விருதுநகரில் தீபாவளிக்காக பணம் வசூலித்த 3 தீயணைப்பு வீரர்களை பணியிட மாற்றம் செய்து தீயணைப்புத்துறை தென் மண்டல துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த வினோத்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: டாஸ்மாக் சென்றவரை தாக்கி பணம், நகை கொள்ளை; நண்பர் ஏவிய கும்பல் வெறிச்செயல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்திரா நகரில் வசிப்பவர் முனியசாமி (41). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.முனியசாமி, தன் நண்பரான கனகராஜ் என்பவருடன் வீட்டில் இருந்து டாஸ்மாக் கிளம்பியுள்ளார். சிவகாசி ரிசர்வ... மேலும் பார்க்க

போலீஸால் பாதுகாக்கப்படும் 'போலி' வேட்பாளர்?- கைதுக்காக காத்திருக்கும் 200 காவலர்கள்! - என்ன சிக்கல்?

பஞ்சாப் மாநிலத்தின் ராஜ்யசபா பதவிக்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) வாக்களிக்கும் மறைமுக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் ஜனதா கட்சியின் தலைவர் நவ்நீத் சத... மேலும் பார்க்க