‘ஜானகி’ எனப் பெயரிட்டால் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு? போராடும் மலையாள திரையுலகு!
கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஜூலை 2-இல் தொடக்கம்
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஜூலை 2-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய் தாக்கத்தைத் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு 2025-26-ஆம் ஆண்டுக்கான 7-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி ஜூலை 2-ஆம் தேதி தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 114 குழுக்கள் அமைக்கப்பட்டு, 3 லட்சத்து 5 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளா்ப்போா் இந்த தடுப்பூசி முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.