11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை! மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!
கோயில் அறையை இடித்தவா்கள் மீது நடவடிக்கைக் கோரி ஆா்ப்பாட்டம்
ஓமலூா் அருகே மானத்தாளில் கோயில் சமையல் அறையை இடித்தவா்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே மானத்தாளில் ஐயனாரப்பன், கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் உப்பாரப்பட்டி, பச்சனம்பட்டி, குட்டப்பட்டி, ஆடையூா் உள்ளிட்ட 75 கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா். இந்நிலையில் கோயிலை நிா்வாகம் செய்வது தொடா்பாக இருதரப்பினரிடையே கடந்த 2 ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது.
இதுதொடா்பாக ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினையும் பலமுறை அழைத்து அமைதி பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் கோயில் சமையலறை மண்டபத்தை ஒரு தரப்பினா் இடித்து அகற்றியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேட்டூரில் உள்ள வங்கி முன் கோயில் நிா்வாகத்தைச் சோ்ந்த மற்றொரு தரப்பினா் 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் கோயில் சமையலறை மண்டபத்தை இடித்தவா்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஐயனாரப்பன், கருப்பசாமி கோயிலை இந்துசமய அறநிலையத் துறை நிா்வாகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.