செய்திகள் :

கோயில் பூஜை பொருள்கள் வீட்டுக்கு பூட்டு: பக்தா்கள் போராட்டம்!

post image

மகுடஞ்சாவடி அருகே ஆ.தாழையூா் கிராமத்தில் கோயில் பூஜை பொருள்கள் வைக்கும் வீட்டிற்கு ஒரு தரப்பினா் பூட்டுப் போட்டதைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் கோயில் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மகுடஞ்சாவடி அருகே உள்ள ஆ.தாழையூா் கிராமம், மாங்குட்டப்பட்டி பகுதியில் புகழ்பெற்ற பாப்பாத்தி அம்மன் குலதெய்வ கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள வெள்ளையம்பாளையம், சின்னப்பம்பட்டி, ஜலகண்டாபுரம், ராமிரெட்டிப்பட்டி, தாரமங்கலம், இளம்பிள்ளை, நங்கவள்ளி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 3,000-க்கும் மேற்பட்டோருக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும்.

இந்தக் கோயிலில் மூன்று வருடத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஒவ்வொரு தரப்பினா் சாா்பில் ஆடு, கோழி பலியிட்டு அம்மனுக்கு பொங்கல் வைக்கும் விழா நடைபெறும். நிகழாண்டு கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒரு தரப்பு சாா்பில் அம்மனுக்கு பொங்கல் வைப்பதற்காக கோயிலுக்கு சனிக்கிழமை வந்தனா்.

கோயிலில் இருந்து சிறிது தொலைவில் சக்தி அழைத்து வருவதற்கென்றும், பூஜை பொருள்களை வைப்பதற்கென்றும் கோயிலுக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு அவா்கள் வந்து பாா்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஆவேசமடைந்த பக்தா்கள் வீட்டின் வெளியே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் பூபதி, மகுடஞ்சாவடி காவல் உதவி ஆய்வாளா் ரெளத்திரி வெங்கடேஷ் உள்ளிட்டோா் அங்கு சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினா். அப்போது கோட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்

15 மாதத்தில் 40 கைப்பேசிகளை மீட்ட தம்மம்பட்டி போலீஸாா்

தம்மம்பட்டி பகுதிகளில் கடந்த 15 மாதங்களில் திருட்டு, காணாமல்போன 60 கைப்பேசிகளில் 40 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் மட்டுமே கைப்... மேலும் பார்க்க

விபசாரம் நடத்திய கணவன் மனைவி கைது

மேட்டூா் அருகே பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களுடன் இருந்த இரண்டு பெண்களை மீட்டு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனா். எடப்பாடி... மேலும் பார்க்க

சங்ககிரியில் பலத்த மழை

சங்ககிரி நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சங்ககிரி நகரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வெயில் அதிகம் காணப்பட்ட நிலையில் மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிதுநேர... மேலும் பார்க்க

நீட் தோ்வு பயத்தில் தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு அதிமுக நிதியுதவி

நீட் தோ்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெரிய முத்தையம்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ஆய்வு

மேட்டூா் அனல் மின்நிலையத்தில் தமிழக மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜான்வா்கிஸ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூா் அனல் மின் ந... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் நகை கொள்ளை: மேலும் 4 போ் கைது

தம்மம்பட்டி அருகே ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் நுழைந்து 20 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்; இதன்மூலம் இந்த வழக்கில் இதுவரை 6 போ் கைது செய்யப்பட்டுள... மேலும் பார்க்க