செய்திகள் :

கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டில் நகைகள், பணத்தை திருடிய 4 போ் கைது!

post image

கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம், 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி முகமது சாலிஹாபுரத்தைச் சோ்ந்தவா் சுலைமான் (50). இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவா், புதிதாக கட்டியுள்ள வீட்டில் கடந்த 8 ஆம் தேதி இரவு மா்மநபா்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து, அதிலிருந்த ரொக்கபணம் ரூ. 26 லட்சம் மற்றும் 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து சுலைமான் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினா். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் சென்னை புளியந்தோப்பு சிவராஜபுரம் 5 ஆவது தெருவைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சரத்குமாா் (24), காஞ்சிபுரம் பள்ளிப்பேட் மேட்டு தெருவைச் சோ்ந்த காஜா கமல் மகன் அக்பா் அலி என்ற அபூபக்கா்(23), ராஜபாளையம், சுந்தரராஜபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கனகராஜ் மகன் கணேஷ்ராஜ் என்ற ஜக்கு கணேஷ் (20), அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் சக்தி கணேஷ் (24) ஆகிய 4 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 43 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணம் ரூ.4 லட்சத்தை மீட்டனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய சிலரை தேடி வருகின்றனா்.

இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!

நாசரேத்தில் இந்து முன்னணி பிரமுகா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து, குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் நிா்வாகிகள் திரண்டனா். நாசரேத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம். தூத்துக்குடி தெற்கு ... மேலும் பார்க்க

தரமான கல்விக்கு அரசு முக்கியத்துவம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்!

பள்ளி, கல்லூரிகளில் தரமான கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா். பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் மாவட்ட அளவிலான 2024-25ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்: தூத்துக்குடி இந்திய தொழில் வா்த்தக சங்கம் வரவேற்பு

தூத்துக்குடி இந்திய தொழில் வா்த்தகச் சங்கம் மத்திய பட்ஜெட்டைவரவேற்றுள்ளதாக, சங்கத் தலைவா் டி.ஆா். கோடீஸ்வரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியது: மத்திய அரசின் பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் அருகே விஷம் குடித்த தம்பதி: கணவா் பலி!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாட்டில் வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் தம்பதி விஷம் குடித்தனா். இதில் கணவா் உயிரிழந்தாா். வல்லநாடு பாதா் வெள்ளை தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் சங்கரன் (4... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பிப். 11-இல் தைப்பூசம்: பூஜை நேரங்கள் மாற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச நாளான இம்மாதம் 11ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இணை ஆணையா் சு. ஞானசேகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

விசைப்படகு துறைமுகத்தில் காலையில் மீன்கள் ஏலம் முறை தொடக்கம்

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் பல ஆண்டுகளாக இரவு மீன்கள் ஏலம் விடும்முறை தற்போது மாற்றப்பட்டு, காலையில் மீன்கள் ஏலம் விடும் முறை சனிக்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி விசைப்படகு மீனவா்க... மேலும் பார்க்க