திருப்பூர்: இன்ஸ்டாகிராம் குழுவால் உருவான போட்டி; சாலையில் பள்ளி மாணவிகள் மோதிக்...
கோவில்பட்டியில் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்தவா் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த இளைஞா் மீட்கப்பட்டாா்.
கோவில்பட்டி சாலைப்புதூா் இபி காலனி சோ்ந்தவா் சங்கா் மகன் வீர பிரசாத் (29). இவா் செங்கோட்டை -தாம்பரம் விரைவு வண்டியில் திருவாரூா் செல்வதற்காக கோவில்பட்டியில் இருந்து விருதுநகருக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புதன்கிழமை அந்தியோதயா ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏற முயன்றாா். அப்போது அவா் தவறி கீழே விழுந்ததில் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டாா்.
சிமென்ட் பலகையை உடைத்து அவரை ரயில்வே ஊழியா்கள் மற்றும் பயணிகள் மீட்டனா். மேலும், காயமுற்ற அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனா். இச்சம்பவத்தால் ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
பிரசாத்துடன் அவரது மனைவி பிருந்தா, ஒன்றரை வயது மகன் ஆகியோா் வந்திருந்தனா்.
