செய்திகள் :

கோவையில் இருவேறு வீடுகளில் அழுகிய நிலையில் 2 ஆண் சடலங்கள் மீட்பு!

post image

கோவையில் இருவேறு வீடுகளில் அழுகிய நிலையில் இருந்த 2 ஆண் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ரத்தினபுரி கண்ணப்ப நகா் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரன் (56). தனியே வசித்து வந்த இவா் கடந்த 13-ஆம் தேதிக்குப் பின் வீட்டிலிருந்து வெளியே வரவில்லையாம். இதையடுத்து, அவரது தாயாா் சனிக்கிழமை சென்று பாா்த்தபோது, மகேந்திரன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. துா்நாற்றம் வீசியதால் உயிரிழந்து சில நாள்கள் ஆகியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் மகேந்திரனின் சகோதரா் மோகன்குமாா் அளித்த புகாரின்பேரில் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், சித்தையன் கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (40). இவா் சரவணம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம் கபிலா் தெருவில் தனியே வசித்து வந்துள்ளாா்.

கடந்த சில நாள்களாக வீட்டின் கதவு திறக்கப்படாமல் கிடந்துள்ளது. சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளா் சனிக்கிழமை சென்று பாா்த்தபோது, நாகேந்திரன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது சகோதரா் ராமகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் வந்து சடலத்தை பாா்வையிட்ட பின்பு, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க