செய்திகள் :

கோவையில் கொட்டும் மழை: கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்!

post image

கோவையில் கொட்டும் மழைக்கு நடுவே கால்வாய்க்குள் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்தது.

கோவை மாவட்டத்தில் இன்று(மே 26) 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் கோவை உப்பிலி பாளையம் சாலையில் இன்று அதிகாலை திருச்சி சாலையில் இருந்து வேகமாக கார் ஒன்று வந்தது. காரை கேரள மாநிலம் ஆளு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார்.

அங்கு உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் கார் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் சென்ற ஆட்டோ மீது மோதியது. தொடர்ந்து தாறுமாறாக ஓடிய கார், சாலை ஓரத்தில் இருந்த கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

பள்ளத்தில் விழுந்த காருக்குள் இருந்து வெளியில் வர முடியாமல் மணிகண்டன் போராடிய நிலையில், இந்த விபத்தை பார்த்தவர்கள் உடனடியாக பீளமேடு தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் காருக்குள் சிக்கிக் கொண்ட மணிகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு பள்ளத்தில் இருந்து காரை சிங்காநல்லூர் போலீஸார் கிரேன் மூலம் காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கால்வாயில் தண்ணீர் குறைந்த அளவே சென்று கொண்டு இருந்ததால் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிக்க: 9000 குதிரைத் திறன் மின்சார ரயில் இன்ஜின்: பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்!

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை க... மேலும் பார்க்க

தேமுதிகவுடன் சுமூக உறவு உள்ளது- எடப்பாடி பழனிசாமி

தேமுதிகவுடன் சுமூக உறவு உள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மதுரையில் கால்வாயை திரைச்சீ... மேலும் பார்க்க

அஞ்சலை அம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின்... மேலும் பார்க்க

தொடர் வெற்றிக்குக் காரணம் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

திமுக தொடர்ந்து வெற்றி பெருவதற்கான காரணங்களில் ஒன்று நம்முடைய கூட்டணி என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் ... மேலும் பார்க்க

தில்லி மதராஸி குடியிருப்பு இடிப்பு: தமிழகம் திரும்புவதற்கு அரசு நடவடிக்கை!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்களின் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவ... மேலும் பார்க்க

புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்!

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ப... மேலும் பார்க்க