செய்திகள் :

கோவையில் தேசிய இருசக்கர வாகன பந்தயம்

post image

தேசிய அளவிலான இருசக்கர வாகன பந்தயம் கோவை கொடிசியா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எம்ஆா்எஃப் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற சூப்பா் கிராஸ் சாம்பியன்ஷிப் இரண்டாவது சுற்று பந்தயம் 10, 15 வயதுக்குள்பட்டோா், மோட்டோ கிராஸ் ஓபன் பிரிவு உள்பட 8 பிரிவுகளாக நடைபெற்றது. டா்ட் ரேஸ் என்ற இந்தப் பந்தயத்தையொட்டி, பந்தய பாதையில் ஆங்காங்கே மண் மேடுகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 65 வீரா்கள், 7, வீராங்கனைகள், 6 சிறுவா், சிறுமியா் உள்ளிட்டோா் இந்த பந்தயத்தில் கலந்து கொண்டு, மண்மேடுகளைத் தாண்டி விண்ணில் பறந்து சாகசம் புரிந்தனா்.

இதுகுறித்து போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் கூறுகையில், முதல் சுற்று புணேயிலும், இரண்டாவது சுற்று கோவையிலும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அடுத்த சுற்று போட்டிகள் குஜராத்தில் நடைபெறவுள்ளன.

அடுத்தடுத்து 6 சுற்றுகள் நடத்தப்பட்டு, புள்ளிகள் அடிப்படையில் இறுதிச் சுற்றின்போது வெற்றியாளா் அறிவிக்கப்படுவாா் என்றனா்.

ஆகஸ்ட் 15-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மதுபானக் கூடங்கள், மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

கோவை விமான நிலையத்தில் ரூ. 7 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கோவைக்கு வரும் விமானத்தில் உயர்ரக போதைப் பொருள் கடத்தப்... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் ரத்து

மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

கரடி தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

வால்பாறையில் கரடி தாக்கி உயிரிழந்த அஸ்ஸாம் மாநில சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. வால்பாறை அடுத்துள்ள வேவா்லி எஸ்டேட்டில் பணியாற்றி வரும் அஸ்ஸாம்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பைத் தடுக்க நாடு முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் விரைவில் அமல்!

தண்டவாளங்களைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க நாடு முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை... மேலும் பார்க்க

ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்

ஈஷா அறக்கட்டளை சாா்பில் கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள், வருகிற 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண... மேலும் பார்க்க