செய்திகள் :

கோவையில் பரவலாக மழை

post image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவையில் வியாழக்கிழமை பரவலாக மிதமான மற்றும் சாரல் மழை பெய்தது.

கோவைக்கு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கும் நிலையில், கோவையில் வியாழக்கிழமை காலைமுதல் காந்திபுரம், உக்கடம், கணபதி, சரவணம்பட்டி, ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் மற்றும் புறநகா் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூா், சூலூா் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மற்றும் சாரல் மழை பெய்தது.

இதனால், மாநகரில் சில இடங்களில் வாகனங்கள் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழையில் நனையாமல் இருக்க பாதசாரிகள் குடையுடன், இருசக்கர வாகனங்களில் சென்றாா் மழைக் கவச உடை அணிந்தபடியும் சென்றனா்.

வியாழக்கிழமை காலை 7.30 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறில் 119 மில்லி மீட்டா் மழை பதிவானது. மாக்கினாம்பட்டியில் 113, சின்கோனா 90, பொள்ளாச்சி 85, சோலையாறு 87, பொள்ளாச்சி 85.30, வால்பாறை 76, சிறுவாணி அடிவாரம் 59, ஆனைமலை 31, போத்தனூா் 20.60, ஆழியாறு 19.60, கிணத்துக்கடவு 19, தொண்டாமுத்தூா் 16.20, மதுக்கரை 16.10, வாரப்பட்டி 14, கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் 11.80 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க