செய்திகள் :

கோவை: வட மாநில இளைஞர் கொடூர கொலை - வெளியான அதிர்ச்சித் தகவல்

post image

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் அன்சாரி. இவர் கோவை மாவட்டம், அரசூர் பகுதியில் உள்ள பவுண்டரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அரசூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள ஒரு தோப்பில் அவரின் உடல் நேற்று சடலமாகக் கண்டறியப்பட்டது.

கோவை
கோவை

அந்த டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தோப்புக்குள் உள்ள புதரில் சுபம் அரை நிர்வாண நிலையில், முகம் சிதைந்து சடலமாகக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர் சூலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், சுபமின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சடலம்

அங்கு அவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “சுபம் அன்சாரி கடந்த 8 மாதங்களாக அங்கு தங்கி பணியாற்றி வருகிறார். அவரின் ஆசனவாய் பகுதியில் ரத்தக் கறை உள்ளது. அவரின் முகம் சிதைந்துள்ளது. கடந்த 6 நாள்களாக சுபம் பணிக்கு செல்லாமல், டாஸ்மாக் கடை அருகே மது அருந்தி வந்துள்ளார்.

காவல்துறை

மேலும் காலி பாட்டில்களை சேகரித்து வந்ததும் தெரியவந்துள்ளது. சுபம் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர் பணியாற்றிய நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றனர்.

மாடியில் தூங்கியவர் ரத்த வெள்ளத்தில் மர்ம மரணம் - இறப்பு குறித்து போலீஸார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். வயதான கணேசன் மதுவுக்கு அடிமையான நிலையில் அடிக்கடி குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்... மேலும் பார்க்க

ஆட்டோவை வழி மறித்து பெண் வெட்டிக்கொலை; 2 ஆண்டுக்குப் பிறகு கொலையாளிகள் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஜமீன் தேவர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மனைவி வெள்ளைத் துரைச்சி. இவர், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி இரவு குமரெட்டியாபுரத்தில் இர... மேலும் பார்க்க

Kerala: `பெண் ஊழியரை கடத்தி, மிரட்டல்?' - போலீசார் வழக்கு பதிவு.. நடிகர் கிருஷ்ணகுமார் சொல்வதென்ன?

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினிமா நடிகர் கிருஷ்ணகுமார் பா.ஜ.க நிர்வாகியாகவும் உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள்... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலி; தீவிர சிகிச்சையில் மகன்; என்ன நடந்தது?

திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியை அடுத்த முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (61). இவரின் மனைவி புவனேஸ்வரி.இந்தத் தம்பதியினருக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் குட... மேலும் பார்க்க

சென்னை: அரசு வேலைக்குப் போலி நியமன ஆர்டர்; 12 பேரிடம் ரூ.1,66,36,000 மோசடி செய்த கும்பல் கைது

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் சென்னை தி.நகரைச் சேர்ந்த மோகன்ராஜன், அவரின் கூட்டாளியான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: இலங்கைக்குக் கஞ்சா கடத்த முயற்சி; 70 கிலோ பறிமுதல்; காருடன் 6 பேர் கைது; பின்னணி என்ன?

தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்கள், கஞ்சா, பீடி இலைகள் மற்றும் சமையல் பொருட்களான மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்டவைத் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.கடந்த சில நாள்களுக்கு முன் இலங்... மேலும் பார்க்க